குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்; ஆந்திரத்தில் அள்ளி வீசும் அரசியல் கட்சி!

chandrababunaidu - 2026

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று, ஆந்திராவில் வாக்குறுதியை அள்ளி வீசி அசரவைத்துள்ளன அங்குள்ள அரசியல் கட்சிகள்!

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, உங்கள் எதிர்காலம் என் கடமை என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

மாதம் மூவாயிரம் ரூபாய் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயது உச்ச வரம்பு 65 லிருந்து 60 ஆகக் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சந்திரண்ணா காப்பீடு திட்டத்தின் உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவசமாக 12 மணி நேர மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என அவரது தேர்தல் அறிக்கை கூறுகிறது.

jaganmohanreddy - 2026

அதேபோல்… ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளநிலை வழக்கறிஞர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை, 100 கோடி ரூபாயில் வழக்கறிஞர்கள் நலநிதி உருவாக்கம் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு முதலீடாக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இயற்கையாக இறந்தால் அவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். ஜீவன் பீமா பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான அம்சங்கள் பல இருக்கின்றன. இலவசம், தள்ளுபடி என எல்லாம் இருந்தாலும், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories