December 6, 2025, 7:56 PM
26.8 C
Chennai

குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்; ஆந்திரத்தில் அள்ளி வீசும் அரசியல் கட்சி!

chandrababunaidu - 2025

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று, ஆந்திராவில் வாக்குறுதியை அள்ளி வீசி அசரவைத்துள்ளன அங்குள்ள அரசியல் கட்சிகள்!

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, உங்கள் எதிர்காலம் என் கடமை என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

மாதம் மூவாயிரம் ரூபாய் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயது உச்ச வரம்பு 65 லிருந்து 60 ஆகக் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சந்திரண்ணா காப்பீடு திட்டத்தின் உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவசமாக 12 மணி நேர மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என அவரது தேர்தல் அறிக்கை கூறுகிறது.

jaganmohanreddy - 2025

அதேபோல்… ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளநிலை வழக்கறிஞர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை, 100 கோடி ரூபாயில் வழக்கறிஞர்கள் நலநிதி உருவாக்கம் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு முதலீடாக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இயற்கையாக இறந்தால் அவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். ஜீவன் பீமா பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான அம்சங்கள் பல இருக்கின்றன. இலவசம், தள்ளுபடி என எல்லாம் இருந்தாலும், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories