பீகார் புயல்: பலியானோர் குடும்பத்துக்கு மோடி இரங்கல்

Published:

புது தில்லி : பீகார் மாநிலத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மோடி தனது டிவிட்டரில்… இயற்கைச் சீற்றத்தால் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலைமை குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேட்டறிந்ததாகவும், மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக நிதிஷிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கூறி, பீகாருக்குச் சென்று நிலையை தீவிரமாகக் கண்காணிக்கும் படி கூறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் பாட்னா, பூர்னியா மற்றும் மாதேபுரா பகுதிகளில் வீசிய புயலில், 30க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img