ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரம்: இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்? கொண்டாட என்ன இருக்கிறது?

rajiv gandhi - 2026

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பரவலாக விவாதிக்கப் பட்டது. தீர்ப்பின் முழு விவரம் தெரியாமல், அரசியல் கட்சிகள் பலவும் அவரவர்க்கு ஏற்ப அறிக்கைகளை வெளியிட்டனர். உண்மையில், எல்லோரும் கொண்டாடத் தக்க வகையில் இந்தத் தீர்ப்பு அமைந் துள்ளதா? அப்படி என்னதான் இதில் சூட்சுமம் உள்ளது?

எழுத்தாளர் வசந்தன் பெருமாள் இந்தத் தீர்ப்பு குறித்து இவ்வாறு விளக்குகிறார்.

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை என்பதுதான் உண்மை!

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதைப் பற்றி தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை!

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ராஜீவ்காந்தி கொலையாளிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது! ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்தது சிபிஐ என்பதால் மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெற வேண்டும்!

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

ஆனால் குற்றவாளிகளை 3 நாட்களில் விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா! இது தன்னிச்சையாக மாநில அரசே விடுதலை செய்யப் போகிறது என்ற அறிவிப்பு போன்றது!

தனது ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு விடுதலை செய்ய தடை விதிக்கக் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது! தடை உத்தரவு பெற்றது! இது 2016 ல் நடந்த கதை!

குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் இரண்டு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்!

1. கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மாநில ஆளுநரிடம் தான் அளித்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது! நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்!

2. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு தொடுத்து இருக்கும் வழக்கை முடித்து வைக்க வேண்டும்!

குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவில் மத்திய அரசின் கருத்தை தெரிவிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது!

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

விடுதலை செய்ய ஒப்புக் கொள்ள முடியாது என்று மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்தது! கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது! நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசின் பதில் கிடைத்து விட்டது!

அதனால் மாநில ஆளுநரை அணுகி தீர்வையும் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொள்ளும்படி மாநில அரசுக்கு தெரிவித்து விட்டது! இதற்கு பொருள் விடுதலையை சிபாரிசு செய்வது அல்ல! மத்திய அரசு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்காத இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று ஆளுநரிடம் வழிகாட்டுதலை கோரலாம்!

மத்திய அரசின் நிராகரிப்பை மீறி விடுதலை செய்யலாம் என்று ஆளுநர் சொல்லப் போவதில்லை! மத்திய அரசின் ஒப்புதலை பெற வழி இருக்கிறதா என்று வேண்டுமானால் ஆளுநரிடம் யோசனை கேட்கலாம்! அவ்வளவு தான்!

அதனால் ‌ஏழுபேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு என்பது சரியான தகவல் அல்ல! பேரறிவாளன் ஆளுநரிடம் அளித்து கவனிக்கப்படாத கருணை மனு பற்றிய விவகாரத்தில் பேரறிவாளனின் மனுவை பரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! பரிசீலனையின் முடிவு விடுதலையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை! பேரறிவாளனுக்கு சாதகமாக பரிசீலனை செய்யும் படி நீதிமன்றம் சொல்லவில்லை! அப்படி சொல்ல முடியாது  தவிர பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் உச்ச நீதிமன்ற ம் விதிக்கவில்லை!

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

எனவே ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விஷயத்தில் புதிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை! நேற்றைய நிலை தான் இப்போதும் தொடர்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories