படியில் மட்டுமல்ல.. ஏணியில் தொங்கியும்கூட சாகசப் பயணம்!

Published:

bus backside students surandai - 2026

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சோ்ந்த பங்களாசுரண்டை பேரன்புருக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி தொங்கிக் கொண்டு பயணிப்பது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பள்ளி நேரத்தில் தேவையான அளவு நகரப் பேருந்து அல்லது சிற்றுந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

தனியார் பேருந்து உரிமையாளரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம், டானா மார்க்கத்தில் இயங்கும் பல அரசுப் பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயங்காமல் அந்தத் தனியார் பேருந்தை முன்னால் அனுப்பி விட்டு அதற்குப் பின்னே வெறும் வண்டியாகச் செல்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர் பலரும்.

இதில் நடத்துநர், ஓட்டுநர்கள் மற்றும் பணிமனை அதிகாரிகள் அனைவருக்கும் பங்கிருக்கிறது என்று குற்றம் சாட்டும் மக்கள், இதற்கு யார் நடவடிக்கை எடுப்பது? அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் தனியார் பேருந்துகள் மேல் மட்டும் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை என்றும் கூறுகின்றனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

குறிப்பாக, இந்த தனியார் பேருந்து உரிமையாளர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வேலையை விட்டுவிட்டு தனியார் பேருந்து சேவையைத் தொடங்கியவர் என்று குற்றம் சாட்டும் மக்கள், அசம்பாவிதம் ஏதும் நேரும் முன்னதாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img