மனோகர் பாரிகர் வீட்டை சோதனையிட தடை: கோவா நீதிமன்றம்

Published:

பனாஜி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகரின் அதிகார பூர்வ இல்லத்தை சோதனை செய்யுமாறு கூறிய உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கோவா மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்தது. 2006-ஆம் ஆண்டில் அரசு ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், கோவா மாநில அரசில் அமைச்சராக இருந்த பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோவை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த 2 வாரங்களாக தலைமறைவாக உள்ளார். அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தில்தான் தலைமறைவாக இருப்பதாகக் கூறி சமூக ஆர்வலர் எய்ர்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் பனாஜி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மிக்கி பச்சேக்கோவைத் தேட, தில்லி அக்பர் சாலையில் உள்ள பாரிக்கரின் வீட்டில் சோதனை செய்யுமாறு பனாஜி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தை சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நீதிமன்றம் சோதனையிட உத்தரவிட்ட அந்த இல்லம் ராணுவச் சொத்து என்பதால் எங்களால் சோதனையிட இயலாது என்று கோவா மாநில அரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பாரிக்கரின் இல்லத்தில் சோதனையிட தடை விதித்து உத்தரவிட்டனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img