“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”

“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”

(‘மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்.)

சொன்னவர்-புலவர் ந.வேங்கடேசன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(கட்டுரையில் ஒரு பகுதி)

நான் சென்ற ஒரு சோம வாரத்தில், சிதம்பரம் தீட்சிதர்கள்சிலர்வந்துகும்பாபிஷேகப்பத்திரிகையை சமர்ப்பித்து ஆசி கோரி நின்றார்கள்.

பெரியவாள் கும்பாபிஷேகப் பத்திரிகையைப் படித்தார்கள்.பத்திரிகையின் இறுதிப் பாராவில் சர்மகஷாயத்தால் திருமுழுக்குச் செய்யப்பெறும்’ என்ற வரி காணப்பட்டது.

“சர்மகஷாயம் என்றால் என்ன?” என்று பொதுவாக கேள்வியைக் கேட்டார், பெரியவர்

மடத்துத் தொண்டர்,’அது,தமிழ்ச் சொல்..’ என்று பதில்கூறினார்.(ஆழமாகத் தமிழ் படித்தவர் எவரும் இங்கு இல்லை-என்ற மறைமுகமான பதில் உள்ளே இருந்தது)

உடனே பெரியவர், “இங்கே தமிழ் படிச்சவா யாராவது இருக்காளா?” என்று கேட்டார்.

நண்பர்கள் என்னை முன்னுக்குத் தள்ளி, ‘இதோ இருக்கிறார்’ என்றார்கள்.

அப்போது மகாசுவாமிகள் என்னை விளித்துக் கூறிய சொல், என்னை சிலிர்க்க வைத்தது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 05 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”

‘சுவாமி, அது வடமொழிச் சொல், நான் பொருள் அறியேன்”

“அது சம்ஸ்கிருதச் சொல்தான். அந்தக் கஷாயம் எப்படிச் செய்கிறார்கள்?…

தொடர்ந்து பெரியவா; ‘பால்துளிர்க்கும் மரங்களின் பட்டைகளைச் சேகரித்து,இடித்து, தண்ணீரில் போட்டு, ஒரு மண்டலம் நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தைக் கலசங்களில் நிரப்பி, வேதிகையில் வைத்து, ஒவ்வொரு கால வழிபாட்டிலும் பூஜிப்பார்கள். அந்த மரப்பட்டைக் கஷாயத்தைக் கொண்டு,சில மூர்த்தங்களையும், கும்பங்களையும் அபிஷேகம் செய்வார்கள்….”

ஒவ்வொரு வாக்கியத்திலும் இடைவெளி விட்டு, பாலகரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பெரியவர் விளக்கிய தன்மையை என்னென்று சொல்வது!

“பால் துளிர்க்கும் மரம் என்றால்,தெரியுமோ?…

ஆலமரம்,அரசமரம்,அத்தி,பலா…இதெல்லாம்!” என்று மேலும் விளக்கினார்கள்.

‘மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories