December 6, 2025, 9:56 AM
26.8 C
Chennai

ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தல் விறுவிறு: பேரவைக்கு வரப் போவது யார்?!

01 07Nov Dhin election - 2025சட்டப்பேரவை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் ஆந்திராவில் வாக்குப் பதிவு விறுவிறுவெனத் தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன், பவன் கல்யாண் ஆகியோரது கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தேசியக் கட்சிகளான பாஜக., காங்கிரஸ் போட்டியில் இல்லாதது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மக்களவைத் தேர்தலோடு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3,93,45,717 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது! காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.

vote request - 2025

இந்தத் தேர்தலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு களம் காண்கிறார். அவரது மகனான நாரா லோகேஷ் மங்களகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இன்று காலை சந்திரபாபு நாயுடு அவர் மனைவி புவனேஸ்வரி, அவரது மகன் நரா லோகேஷ் அவர் மனைவி பிராஹ்மணீ என குடும்பத்துடன் சென்று உண்டவல்லியில் வாக்களித்தனர்.

எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெண்டுலாவில் போட்டியிடுகிறார். அவர் தனது வாக்கினைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார்.

vote requests - 2025

இது போல், ஜனசேனா கட்சி தலைவரான நடிகர் பவன் கல்யாண், பீமாவரம், கஜூவாக்கா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories