December 6, 2025, 4:56 AM
24.9 C
Chennai

வாடிக்கையாளர் பொருளை எடுத்துச் செல்ல கேரி பேக் தர வேண்டியது நிறுவனத்தின் கடமை!

bata carry bag - 2025

நுகர்வோர் வாங்கிய பொருளை எடுத்துச் செல்ல கேரி பேக் கொடுத்து அனுப்ப வேண்டியது ஒரு நிறுவனத்தின் அடிப்படைக் கடமை என்று கூறியுள்ளது நுகர்வோர் தீர்ப்பாயம்.

காலணிகள் வாங்கிய வாடிக்கையாளரிடம் கேரி பேக்கிற்கு 3 ரூபாய் வசூலித்த பாட்டா நிறுவனத்துக்கு ரூ.9,000 அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

சண்டிகரில் வசிப்பவர் தினேஷ் பிரசாத் ராதுரி. இவர் அங்குள்ள பாட்டா ஷோரூமில் ரூ.399க்கு காலணி வாங்கியுள்ளார். அதை எடுத்துச் செல்ல பேப்பர் கேரி பேக் கொடுத்த கடை ஊழியர்கள், அதற்கும் சேர்த்து ₹402க்கு பில் கொடுத்துள்ளனர்.

இதனால் கோபமும், மன உளைச்சலும் அடைந்த தினேஷ் பிரசாத், சண்டிகரில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில் காலணியை எடுத்துச் செல்ல கேரி பேக்கிற்கு பாட்டா ஊழியர்கள் 3 ரூபாய்  வசூல் செய்துள்ளனர். அதில் பாட்டா நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பெயரைப் பொறித்து விளம்பரப் படுத்தப்பட்ட கேரி பேக்கிற்கு என்னிடம் எப்படி பணம் வசூல் செய்யலாம்?. எனவே, கேரி பேக்கிற்கு வசூல் செய்த பணத்தை திருப்பித் தரவேண்டும். வழக்குச் செலவு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில் … பேப்பர் கேரி பேக் வழங்க கட்டாயமாக பணம் வசூல் செய்தது தவறு. இது அந்த நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டைத்தான் காட்டுகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கேரி பேக் வழங்க வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை.

எனவே, பாட்டா நிறுவனம் தினேஷ் பிரசாத் ராதுரியிடம் கேரி பேக் வழங்க வசூலித்த 3 ரூபாயை திருப்பித் தர வேண்டும். அதோடு வழக்கு செலவாக ரூ.1,000 மன உளைச்சலுக்கு ரூ.3,000 மற்றும் தீர்ப்பாயத்தின் சட்ட உதவி கணக்கில் ரூ.5,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories