February 22, 2026, 12:36 AM
26.7 C
Chennai

இந்தியாவை சமாதானப் படுத்த… கெஞ்சும் நிலையில் சீனா..! புதிய வரைபடத்தில் காஷ்மீர், அருணாச்சல்!

china map - 2026

சீனா, அதன் கடந்தகால நடைமுறையில் இருந்து சற்றே மாறிய நிலையில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதியாக அதன் வரைபடங்களில் வெளியிட்டுள்ளது. அதன் லட்சிய பெல்ட் மற்றும் சாலை ஊக்குவிப்பு (BRI) பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் மேப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

பெய்ஜிங்கில் நடைபெறும் BRI உச்சி மாநாட்டின் இரண்டாவது மாநாட்டில் இவ்வாறு நடந்துள்ளது. சீனாவின் வரைபடத்தில் இந்தியா BRI திட்டத்தின் அங்கத்தினராகக் காட்டுகிறது. ஆனால், இந்தியா இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தது.

அண்மையில் இந்தியாவின் பகுதியாக அருணாச்சல பிரதேசத்தை காட்டிய ஆயிரக்கணக்கான வரைபடங்களை சீனா அழித்தது. அதைத் தொடர்ந்து, சீனாவின் போலித்தனமான நடத்தை குறித்து நிறைய கருத்துக்கள் எழுந்தன.

இந்திய-சீன உறவு குறித்து கருத்து தெரிவிக்கும் வல்லுநர்கள், சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவை சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியாகும் என நம்புகின்றனர்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பிஆர்ஐ. சாலைத் திட்டத்தை சீனா திட்டமிடுகிறது. இவ்வாறே தன் வரைபடங்களில் இதுவரை பிஆர்ஐ திட்டத்தைக் காட்டியிருக்கிறது. ஆனால் இந்தச் செயல் இந்தியாவின் இறையாண்மையை கடுமையாக மீறுகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.

கடந்த ஆண்டு, கராச்சியில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த போது, அது குறித்து புகார் தெரிவித்த ​​சீனாவின் அரசு சார் ஊடகங்கள் (CGTN தொலைக்காட்சி) பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நீக்கிவிட்டுக் காட்டின.

இந்தியாவின் அருணாச்சல் பிரதேஷ் பகுதியை திபெத்தின் தெற்குப் பகுதியாக உரிமை கொண்டாடும் சீனா, அவ்வாறே தனது நாட்டுக்கென புதிய வரைபடத்தைக் கையாள்கிறது. அதுபோல் சீன வரைபடம் பாகிஸ்தானின் பகுதியாகவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் காட்டுகிறது.

இந்நிலையில், இந்த பிஆர்ஐ சாலைத்திட்ட மாநாட்டை இந்தியா புறக்கணித்து தன் தரப்பு மனோநிலையை வெளிப்படுத்தியது, சீனாவை பின்வாங்க வைத்திருக்கிறது. தனது நாட்டி லட்சியத் திட்டம் செயல்பட இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் தேவை என்பதை உணர்ந்துள்ள சீனா, நவீன இந்தியா தனக்கு முன்பு போல் தலையாட்டும் நிலையில் இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது, அது வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில், முழு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியாகவும், அருணாச்சல் பிரதேசமும் இந்தியாவின் பகுதியாகவும் குறிப்பிட்டுள்ளது!

1 COMMENT

  1. இப்போதுள்ள, ஸ்ரீ மோடிஜியின் தலைமையில் உள்ள நவீன இந்தியா, முன் போல சீனாவுக்கு தலையாட்டும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து, முழு காஷ்மீரும், அருணாசலப்பிரதேசமும் இந்தியாவின் பகுதி என்று சீன வரைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது. நம் பிரதமரை நாம் பாராட்டியே aakavendum.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories