முதலமைச்சர்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு ஜெய்ஸ் இ மொஹம்மது பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ஜி பாகவத், உ.பி. போலீஸ் டிஜிபி ஆகியோரின் இல்லங்களிலும் தாக்குதல் நடத்தப் போவதாக கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
மேலும், தில்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
“மே 6 முதல் மே 13க்குள் தாக்குதல் நடைபெறும்” என்றும், ஜெய்ஸ் இ மொஹம்மது பயங்கரவாதிகளின் மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து இரண்டு முதலமைச்சர்களின் இல்லங்களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.



