விரைவில் வருவோம்…! மேற்கு வங்கத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் மிரட்டலால் அதிர்ச்சி!

is poster bengali 1 - 2026

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து வங்கத்தை குறி வைத்திருக்கிறது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு!

மீண்டும் விரைவில் வருவோம் என்ற தலைப்புடன் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் போஸ்டர்கள் பெங்காலியில் எழுதப்பட்ட நிலையில் சமூக தளங்களில் உலா வருகிறது. பெங்காலி மொழியில் எழுதப்பட்டிருந்த போஸ்டர்களை வெளியிட்டுள்ள telegram channel அடுத்த தாக்குதல் வங்கதேசம் அல்லது மேற்குவங்கம் ஆக இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது

வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த போஸ்டர் குறித்து உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது

வியாழக்கிழமை இரவு இந்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.  ‘விரைவில் வருவோம் இன்ஷா அல்லாஹ்’ என்று இந்த போஸ்டரில் ஐஎஸ் மாடலில் எழுதப்பட்டிருந்தது. ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் லோகோவுடன் அல்-முர்சலாட் என்ற குழுவின் பெயரில் இந்த போஸ்டர்கள் இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வங்கதேசத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்கெனவே ஊடுருவியுள்ளது! வங்க தேசத்தைச் சேர்ந்த உள்ளூர் பயங்கரவாத அமைப்பான ஜமாத்உல் முஜாஹிதீன், ஜேஎம்பி என்ற பெயரில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருந்து வருகிறது.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்த அமைப்பு இதற்காக பல்வேறு நபர்களை தங்கள் இயக்கத்திற்கு சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்துள்ள மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த அமைப்புக்கு நபர்களை சேர்த்துள்ளது இந்த அமைப்பு.

மூன்று வருடங்களுக்கு முன்பு உள்ளூர் ஜேஎம்பி ஸ்லீப்பர் செல்கள், மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் தங்களது பயங்கரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தது.

இந்நிலையில் ஐ.எஸ்ஸின் வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள ‘விரைவில் வருவோம்’  போஸ்டர் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஆகிவிட்டது குறிப்பாக இலங்கையில் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து வங்கத்திலும் ஐஎஸ் அமைப்பு குறித்து எச்சரிக்கை கண்ணுடன் பார்க்க வேண்டியதாக கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories