December 6, 2025, 1:52 PM
29 C
Chennai

உச்ச நீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை! நீதித் துறையை அச்சுறுத்தும் ‘ரகசிய கை’கள்!

supremecourt - 2025

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக மகளிர் அமைப்புகள் என்ற போர்வையில் அரசியல் ரீதியான சிலர் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணி புரிந்த முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்தப் புகார், நீதிமன்ற உள் விசாரணையாக நடந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழு முன்னர் இது விசாரிக்கப் பட்டது. இந்த விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை என்றும், இதன் பேரில் நடவடிக்கை எதுவும் எடுக்க அவசியமில்லை என்றும் கூறி, இந்த புகாரில் உண்மையில்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப் படுவதாக அறிவிக்கப் பட்டது.

மேலும், விசாரணைக் குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என்றும் கூறினர் நீதிபதிகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புகார் கொடுத்த பெண், தான் இதை எதிர்பார்த்ததாகவும், நீதியின் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் புகாரை ஏற்று, மூன்று நபர் நீதிபதிகளின் விசாரணைக் குழு அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் முன்னர் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.

இதற்கு மகளிர் அமைப்புகள் கூறிய காரணம், இந்த வழக்கு விசாரணையின் போது, இந்தக் குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, புகார் அளித்த பெண், விசாரணைக் குழுவில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரும் எவரும் ஆஜராகவில்லை. எனவே, தலைமை நீதிபதியிடம் விசாரித்துவிட்டு, அப்படியே தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது என்று குறை கூறினர்.

முன்னதாக சிறிய அளவில் உச்ச நீதிமன்றம் முன் போராட்டம் நடந்ததையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்க அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories