அடுத்து பிரதமர் ஆனதும்… மோடியின் முதல் திட்டம்… அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு!

modi ji - 2026

அடுத்து ஆட்சிக்கு வரும் பொழுது தண்ணீர் மேலாண்மையை முக்கிய மற்றும் முதல் விஷயமாக கையில் எடுத்துக் கொள்ளப் போவதாக மோடி தெரிவித்துள்ளார்

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி இதனை வெளிப்படையாக குறிப்பிட்டார்! தாம் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் போது தமது முக்கிய விஷயமாக நீர் மேலாண்மை இருக்கும் என்றார்.

கடந்த 2014 ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றிய மோடி அப்போது பேசுகையில் இந்தியர்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் அதற்காக ஒரு திட்டத்தை தொடங்கப் போகிறேன் ஸ்வச்ச பாரத் அபியான் என்ற தூய்மை இந்தியா திட்டம் என்பதை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்

அதன்படி தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. தான் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப் படும் போது நீர் மேலாண்மையை முன்னிறுத்துவதாக கூறியுள்ளார் மோடி.  மத்திய பிரதேசத்தில் கர்காவ்ன் பகுதியில் மே 17ஆம் தேதி மோடி பேசியபோது 50 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் லோகியா ஜவகர்லால் நேருவிடம் கூறியபோது பெண்களுக்கான மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் கவனிக்கப் படவேண்டும்…  தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை பிரச்னை!

நான் லோகியாவின் ஆசையை நிறைவேற்றுகிறேன். பெண்களுக்கு அவர்கள் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து பெண்கள் சிரமத்தை அனுபவிக்காத வகையில் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கு உறுதி செய்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்

பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் கூட நீர் மேலாண்மை முக்கிய இடம் பிடித்தது! தேசிய அளவில் நதிகளை இணைப்பதற்கு நதி நீர் மேலாண்மையை சரி செய்வதற்கும் ஒரு அமைச்சகம் தனியாக தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தேசிய நதிநீர் இணைப்புக்காக தனி அமைச்சகம் கொண்டு வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை அம்சத்தை பலரும் வரவேற்றனர்! இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் போது தமது வாக்குறுதியான அனைவருக்கும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவார் என்று நம்புகிறார்கள்

இந்தத் தேர்தல் நேரத்தில் கூட பெண் வாக்காளர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் தெரிவித்தது, மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். ஏற்கனவே அவர் நிறைவேற்றிய ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டம் உஜ்வாலா யோஜனா என்ற மின்சாரம் அளிக்கும் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை போல 50 சதவிகிதம் மக்களுக்காவது அவரது திட்டம் நிச்சயம் சென்றடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories