December 5, 2025, 1:25 AM
24.5 C
Chennai

பிரதமர் மோடி தியானத்தால்… மேலும் பிரபலம் அடைந்த கேதார் குகை!

modi himalayas dhyan - 2025

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி தியானம் செய்த குகை, இப்போது மேலும் பிரபலம் அடைந்துவிட்டது. அழகிய ரம்யமான சூழலில், ஒரு இரவு முழுக்க குகையில் தியானத்தில் இருந்தார் மோடி.

இது ஊடகங்களின் தயவால் இப்போது உலக அளவில் கொண்டுசெல்லப் பட்டுவிட்டது. இந்த குகையில் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது என்பது தகவல்.

pm modi in kedarnath cave1 - 2025

யோகாவை உலக அளவில் கொண்டு சென்ற பிரதமர் மோடி, தற்போது தியானத்தை ஊக்குவிப்பதற்காக இந்த குகையில் சில மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளார். மோடியின் பரிந்துரைப்படி குகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்!modi in kadarnath cave route - 2025

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த கையோடு, தான் மிகவும் விரும்பும் இமய மலையில் உள்ள ஆன்மிக அதிர்வலைகள் கொண்ட ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத்துக்கு செல்ல முடிவு எடுத்தார் பிரதமர் மோடி.

அதன்படி தேர்தல் முடிந்த மறுநாளே கேதார்நாத் சென்ற மோடி, பஞ்ச பாண்டவர்கள் இறுதியாக வழிபாடு செய்த இடம் என்று நம்பப் படும் கேதார்நாத்தில் தாமும் வழிபாடு நடத்தினார். அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். சுமார் 17 மணி நேரம் அவர் தியானத்தில் ஈடுபட்டார்.pm modi in kedarnath - 2025

இந்நிலையில் தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் கேதார்நாத்தில் இந்த குகைகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். இவை இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. இங்கே மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. உள்ளே சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.pm modi in kedarnath cave2 - 2025

தற்போது பிரதமர் மோடி தங்கி பிரபலப் படுத்தியுள்ள இந்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும்.

pm modi in kadarnath temple - 2025கடந்த ஆண்டு ரூ.3,000 என இந்த குகைக்கு வாடகை இருந்துள்ளது. ஆனால் பயணிகள் வருகை குறைவால் குகைக்கு முன்பதிவு ஆகாமல் இருந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசித்து, குகையில் வசதிகளை மேம்படுத்தி, வாடகையை ரூ.990 ஆகக் குறைக்க
நடவடிக்கை எடுத்துள்ளார்.pm modi kedarnath cave route2 - 2025

இந்த குகையில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் மூன்று வேளை உணவு, இரண்டு நேரம் டீ வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனியாக
தங்கியிருக்கும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க 24 மணி நேர ஏற்பாடு உள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories