அடுத்த வருடத்தில் அசுர பலம் பெறும் பாஜக.,! மாநிலங்களவையும் வசமாகும்!

modi bjp coucil - 2026

நினைத்ததை சாதிக்கும் அசுரபலம் 2020இல் பாஜகவுக்கு கிடைக்கிறது. எதிர்க் கட்சிகளால் இனி மசோதாக்களை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

மாநிலங்களவையிலும் பாஜக அடுத்த ஆண்டில் அசுர பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும் மாநிலங்களவையில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 இதில் 12 பேர் ஆளும் கட்சியால் நியமிக்கப்படுவர். மசோதாவை நிறைவேற்ற 123 பேர் ஆதரவு தேவை. பாஜக கூட்டணிக்கு தற்போது 102 உறுப்பினர்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அறுபத்தைந்து உறுப்பினர்களும் உள்ளனர்.

முந்தைய 5 ஆண்டில் மொத்தக் குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் சில மக்களவையில் நிறைவேறினாலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தின. எனவே எதிர்க் கட்சிகளின் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக கூட்டணி விரைவிலேயே மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.

இந்த ஆண்டில் மாநிலங்களவையில் 10 இடங்கள் காலியாகின்றன. அடுத்த ஆண்டில் 72 இடங்கள் காலியாகின்றன. ஏப்ரலில் 55 ஜூனில் 5 ஜூலையில் ஒன்று நவம்பரில் 11 இடங்கள் காலியாகின்றன.

இதற்கிடையே மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இவற்றில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் 82ல் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்க முடியும்.

இதன் மூலம் 123 என்ற எண்ணிக்கையை கடந்து தனிப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெற்று விடும். அதன் பிறகு எந்த மசோதாவையும் மாநிலங்களவையிலும் கூட ஆளும் கட்சியால் எளிதில் நிறைவேற்ற முடியும்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

பாஜக கூட்டணியில் இல்லாத ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி  உள்ளிட்ட கட்சிகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதால் இந்த முறை மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற பாஜக பெரிய அளவில் சிரமத்தை சந்தித்து என்று கருதப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories