தோனி அணிந்த ‘கிளவுசில்’ இடம்பெற்றிருந்த முத்திரை துணை ராணுவத்தினுடையது அல்ல எனக் கூறியுள்ள பிசிசிஐ நிர்வாகக் குழு தலைமை அதிகாரி வினோத் ராய், இதற்காக அனுமதி கேட்டு ஐசிசியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டி இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டனில் நடந்தது. இதில் தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது அணிந்திருந்த ‘கிளவுசில்’ இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் ‘பலிதான்’ என்ற முத்திரை பொறிக்கப்பட்டு இருந்தது! தோனி இந்திய ராணுவ கௌரவ லெப்டினன்ட் கர்னல் என்பதால், அவர் ராணுவத்தினருக்கு வழங்கப் படும் ஒரு பேட்ஜ்ஜினை தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். .இது ராணுவத்தின் முத்திரை இல்லை என்ற போதும், ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஒரு பேட்ஜ்.!
இதனால் தோனியின் தேசப்பற்றை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி ”வீரர்கள் அணியும் ஆடை, பயன்படுத்தும் பொருட்களில் அரசியல், மதம், இன உணர்வுகளை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது” என உள்ளது. இதனால் தோனிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐசிசி, அந்த லோகோவை தோனி நீக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்ட் பிசிசிஐ.,யிடம் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவவர் வினோத் ராய் கூறுகையில், அந்த முத்திரையை பயன்படுத்த தோனி சார்பில் பிசிசிஐ முறைப்படி ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வியாபாரம், மதம், ராணுவம் சார்ந்து எந்த முத்திரையினையும் பயன்படுத்த க்கூடாது. ஆனால் தோனியின் கிளவுசில், இருக்கும் முத்திரை, மதம், வியாபாரம் சார்ந்தது இல்லை. தோனி கிளவுசில் வைத்திருக்கும் முத்திரை துணை ராணுவத்தினுடையதும் அல்ல. இருப்பினும் இந்த முத்திரையை பயன்படுத்த தோனிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ விண்ணப்பித்துள்ளது.
இந்த முத்திரையை நீக்க வேண்டும் என வேண்டுகோள்தான் வந்துள்ளது. உத்தரவு எதுவும் ஐசிசி பிறப்பிக்கவில்லை. .இந்த விவகாரம் கவலைக்குரியது என்றாலும், ஐசிசி அதிகாரிகளுடன் பேசி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி துவங்கும் முன்னர் இங்கிலாந்து செல்வார் என்று கூறினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் மத ரீதியான செயலை வெளிப்படுத்தி தொழுகை நடத்தியதையும், அந்தப் புகைப்படத்தை வெளியிட்டும், ஐசிசி.,க்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எது மத ரீதியான வெளிப்பாடு என்பதை ஐசிசி உணரட்டும் என்று பலரும் ஐசிசிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தோனி அணிந்த க்ளவுசில் இருக்கும் ‘பலிதான்’ என்ற வாசகத்துடன் கூடியது ஒரு பேட்ஜ். இது ராணுவத்தில் வழங்கப்படும் பேட்ஜ் என்று கூறப்பட்டுள்ளது. எதிரி அச்சப்பட வேண்டும் என்ற கருத்துடன் கூடிய பேட்ஜ் அது என்று கூறப் படுகிறது.