December 6, 2025, 11:27 AM
26.8 C
Chennai

கிளவுஸ் விவகாரம்… தோனிக்கு பிசிசிஐ ஆதரவு!

dhony glove1 - 2025

தோனி அணிந்த ‘கிளவுசில்’ இடம்பெற்றிருந்த முத்திரை துணை ராணுவத்தினுடையது அல்ல எனக் கூறியுள்ள பிசிசிஐ நிர்வாகக் குழு தலைமை அதிகாரி வினோத் ராய், இதற்காக அனுமதி கேட்டு ஐசிசியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டி இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டனில் நடந்தது. இதில் தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது அணிந்திருந்த ‘கிளவுசில்’ இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் ‘பலிதான்’ என்ற முத்திரை பொறிக்கப்பட்டு இருந்தது! தோனி இந்திய ராணுவ கௌரவ லெப்டினன்ட் கர்னல் என்பதால், அவர் ராணுவத்தினருக்கு வழங்கப் படும் ஒரு பேட்ஜ்ஜினை தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். .இது ராணுவத்தின் முத்திரை இல்லை என்ற போதும், ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஒரு பேட்ஜ்.!

இதனால் தோனியின் தேசப்பற்றை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி ”வீரர்கள் அணியும் ஆடை, பயன்படுத்தும் பொருட்களில் அரசியல், மதம், இன உணர்வுகளை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது” என உள்ளது. இதனால் தோனிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐசிசி, அந்த லோகோவை தோனி நீக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்ட் பிசிசிஐ.,யிடம் கேட்டுக் கொண்டது.

balidan2 - 2025இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவவர் வினோத் ராய் கூறுகையில், அந்த முத்திரையை பயன்படுத்த தோனி சார்பில் பிசிசிஐ முறைப்படி ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வியாபாரம், மதம், ராணுவம் சார்ந்து எந்த முத்திரையினையும் பயன்படுத்த க்கூடாது. ஆனால் தோனியின் கிளவுசில், இருக்கும் முத்திரை, மதம், வியாபாரம் சார்ந்தது இல்லை. தோனி கிளவுசில் வைத்திருக்கும் முத்திரை துணை ராணுவத்தினுடையதும் அல்ல. இருப்பினும் இந்த முத்திரையை பயன்படுத்த தோனிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ விண்ணப்பித்துள்ளது.

இந்த முத்திரையை நீக்க வேண்டும் என வேண்டுகோள்தான் வந்துள்ளது. உத்தரவு எதுவும் ஐசிசி பிறப்பிக்கவில்லை. .இந்த விவகாரம் கவலைக்குரியது என்றாலும், ஐசிசி அதிகாரிகளுடன் பேசி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி துவங்கும் முன்னர் இங்கிலாந்து செல்வார் என்று கூறினார்.

balidan - 2025 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் மத ரீதியான செயலை வெளிப்படுத்தி தொழுகை நடத்தியதையும், அந்தப் புகைப்படத்தை வெளியிட்டும், ஐசிசி.,க்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எது மத ரீதியான வெளிப்பாடு என்பதை ஐசிசி உணரட்டும் என்று பலரும் ஐசிசிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தோனி அணிந்த க்ளவுசில் இருக்கும் ‘பலிதான்’ என்ற வாசகத்துடன் கூடியது ஒரு பேட்ஜ். இது ராணுவத்தில் வழங்கப்படும் பேட்ஜ் என்று கூறப்பட்டுள்ளது. எதிரி அச்சப்பட வேண்டும் என்ற கருத்துடன் கூடிய பேட்ஜ் அது என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories