June 16, 2025, 12:39 PM
32 C
Chennai

2ஜி வழக்கில் இறுதி வாதம்: இன்று துவக்கம்

புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை தொடங்குகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது. 2012 பிப்.2-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் 2ஜி அலைக்கற்றை தொடர்பான 122 உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை, சிபிஐ தரப்பில் 154 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். குற்றம் சாற்றப்பட்டோர் தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் தொடங்குகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு தரப்பு அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், 2ஜி வழக்கும் பெரிய எதிர்பார்ப்பை தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories