சோதனைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக பக்தர் மீது திருப்பதியில் கண்மூடித்தன தாக்குதல்!

tirupati alipiri fight - 2026

திருப்பதி:திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்கு சேர்ந்த ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள்.

செங்கல்பட்டை சேர்ந்த 45 பேர் திருப்பதி மலையில் நாளை நடை பெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்தனர்.அவர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் போது மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் அவர்களது உடைமைகள்,பைகள் ஆகியவற்றை தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது செங்கல்பட்டு பக்தர் ஒருவரின் பையில் குட்கா பாக்கெட் ஒன்று இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கும் விஜிலென்ஸ் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விஜிலென்ஸ் ஊழியர் அந்த பக்தரை மரியாதை குறைவாக பேசினார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் விஜிலென்ஸ் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பக்தர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

விஜிலன்ஸ் ஊழியர்களின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டை சேர்ந்த பெண் பக்தர்கள் அவரை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டு மன்றாடினர். ஆனாலும் விஜிலென்ஸ் ஊழியர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

தற்போது தாக்குதலுக்கு உள்ளான பக்தரை தங்கள் கட்டுப்பாட்டில் விஜிலன்ஸ் துறையினர் வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பக்தர்கள் தாக்கிய விஜிலன்ஸ் ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

திருப்பதி மலையில் பான் பராக், குட்கா,புகையிலை பொருட்கள், பீடி, சீக்ரெட், மது, மாமிசம் ஆகியவற்றை பயன்படுத்த தடை அமலில் உள்ளது. ஆனாலும் பக்தர்கள் சிலர் திருப்பதி மலையில் தடை அமலில் இருப்பது தெரியாமல் அவற்றைக் கொண்டு வருகின்றனர்.

மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடத்தும்போது பக்தர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் அவற்றை கைப்பற்றுவது மட்டுமே நடைமுறையில் உள்ள வழக்கம்.

ஆனால் இந்த சம்பவத்தில் விஜிலென்ஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories