சோதனைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக பக்தர் மீது திருப்பதியில் கண்மூடித்தன தாக்குதல்!

tirupati alipiri fight - 2026

திருப்பதி:திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்கு சேர்ந்த ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள்.

செங்கல்பட்டை சேர்ந்த 45 பேர் திருப்பதி மலையில் நாளை நடை பெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்தனர்.அவர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் போது மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் அவர்களது உடைமைகள்,பைகள் ஆகியவற்றை தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது செங்கல்பட்டு பக்தர் ஒருவரின் பையில் குட்கா பாக்கெட் ஒன்று இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கும் விஜிலென்ஸ் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விஜிலென்ஸ் ஊழியர் அந்த பக்தரை மரியாதை குறைவாக பேசினார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் விஜிலென்ஸ் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பக்தர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

விஜிலன்ஸ் ஊழியர்களின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டை சேர்ந்த பெண் பக்தர்கள் அவரை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டு மன்றாடினர். ஆனாலும் விஜிலென்ஸ் ஊழியர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

தற்போது தாக்குதலுக்கு உள்ளான பக்தரை தங்கள் கட்டுப்பாட்டில் விஜிலன்ஸ் துறையினர் வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பக்தர்கள் தாக்கிய விஜிலன்ஸ் ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

திருப்பதி மலையில் பான் பராக், குட்கா,புகையிலை பொருட்கள், பீடி, சீக்ரெட், மது, மாமிசம் ஆகியவற்றை பயன்படுத்த தடை அமலில் உள்ளது. ஆனாலும் பக்தர்கள் சிலர் திருப்பதி மலையில் தடை அமலில் இருப்பது தெரியாமல் அவற்றைக் கொண்டு வருகின்றனர்.

மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடத்தும்போது பக்தர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் அவற்றை கைப்பற்றுவது மட்டுமே நடைமுறையில் உள்ள வழக்கம்.

ஆனால் இந்த சம்பவத்தில் விஜிலென்ஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories