பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராமே! வதந்தி கிளப்பிய பாகிஸ்தான் ஊடகம்! மறுத்து ஒதுக்கிய ஹிந்துஸ்தான் அரசு!

raveesh kumar - 2026

பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இருக்கிறது என்று ஒரு வதந்தியை பற்ற வைத்துள்ளது பாகிஸ்தான் ஊடகம். அதற்கு ஹிந்துஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத ஆதரவும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று கூறி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டது இந்தியா. இருப்பினும், பாகிஸ்தான் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தும்படி கோரிக்கை வைத்து வருகிறது; அதை பாரத அரசு நிராகரித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ஊடகம் திடீர் வதந்தியைக் கிளப்பி விட்டது. பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் எக்ஸ்பிரஸ் டிரிபியுன் பத்திரிகையில் ஹிந்துஸ்தான் பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்று கூறப் பட்டுள்ளது.

மேலும், பிராந்திய நலனுக்காக பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளுடன் சுமுக உறவை வைத்துக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால், இந்தச் செய்தியை பாரத அரசு மறுத்துள்ளது. இந்தச் செய்திக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியான செய்தியில் உண்மையில்லை. பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கு பிரதமர் மோடியும், ஜெய்சங்கரும் பரஸ்பரம் வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளனர் என்று விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராவீஷ் குமார் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்த போது…

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் பிரதமர் மோடிக்கும், ஜெய்சங்கருக்கும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அவர்களின் செய்தியில் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் கூட்டுறவு, ஒத்துழைப்பை இந்தியா பராமரிக்க விரும்புகிறது என குறிப்பிடப் பட்டது.

பிரதமர் மோடி கொடுத்த பதிலில் நம்பிக்கையை ஏற்படுத்தி, பயங்கரவாதம் இல்லாத சூழலையும், வன்முறையற்ற நிலையையும், விரோதமில்லாத போக்கையும் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத சூழலை உருவாக்குவது அவசியம் என்று தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்தவித கருத்தும் பிரதமர் மோடி சார்பில் தெரிவிக்கப் படவில்லை என்று கூறினார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories