சோதனை மேல் சோதனை..! சொந்த வீட்டை காலி செய்து… வாடகை வீடு தேட எண்ணும் சந்திரபாபு நாயுடு!

Published:

chandrababu naidu - 2026

பாவம் இந்த மனிதருக்கு வந்த வேதனையைப் பாருங்கள்!! வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீடு தேட பேசிக் கொண்டிருக்கிறார் தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு என்கிறார்கள் ஆந்திரப் பிரதேசத்தில்!

பிரஜா வேதிகை என்ற அரசு கட்டடத்தையே அக்கிரம கட்டடம் என்று சொல்லி ஜெகன்மோகன் ரெட்டி அரசு உடைத்து எறிந்து விட்டதால், புது வீடு தேடுவது மேல் என்று நாயுடுகாரு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

குண்டூர் மற்றும் விஜயவாடாவுக்கு விரைந்து சென்று சேரும் வகையில், தனது புதிய வீடு அமையும் படி, அருகில் இருக்கும் இடத்தில் வாடகைக்கு வீடு பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் சந்திர பாபு நாயுடு. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களிடமும் பேசியுள்ளார்.

‘கரகட்டு’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரஜா வேதிகையும், சந்திரபாபு நாயுடு தற்போது வசிக்கும் ‘லிங்கமனேனி’ கெஸ்ட் ஹவுஸும் பக்கத்து பக்கத்து கட்டடங்கள்தான்!

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

பிரஜாவேதிகை இரண்டு நாட்களாக இடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரும்புக் கூரைகளை நட்டு போல்டுகளை நீக்கி எடுத்து எறிந்துவிட்டால் முழுதாக தரைமட்டமாக்கப்பட்டு விடும். அதன் பின் அடுத்த குறி, தான் வசிக்கும் வீடு தான் என்று நாயுடு உணர்ந்து விட்டார்.

அதனால் அதற்கு முன்பே தான் காலி செய்துவிடுவது நல்லது என்று தீர்மானித்துள்ளார். அதன் மூலம், மானமாவது மிஞ்சும் என்று நினைக்கிறார் நாயுடு என்று கூறுகிறார்கள் தெலுங்கு தேசம் கட்சியினர்.

தலைநகர் அமராவதி அருகிலேயே இருக்கும் ‘உத்தண்ட ராயுனி பாலெம்’ என்ற இடத்தைச் சேர்ந்த சில தெலுங்கு தேசம் தலைவர்கள் சந்திரபாபுவுக்கு நிலம் அளிக்க முன்வந்துள்ளனர். அவர் வீடு கட்டிக் கொள்வதாக இருந்தால் தேவையான நிலத்தை அளிக்க மூன்று நான்கு பேர் வரை தயாராக இருக்கிறார்களாம்.

சந்திரபாபு வாடகை வீட்டுக்குப் போவாரா? சொந்தமாக வீடு கட்டிக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கின்றன ஆந்திர ஊடகங்கள்!

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img