சோதனை மேல் சோதனை..! சொந்த வீட்டை காலி செய்து… வாடகை வீடு தேட எண்ணும் சந்திரபாபு நாயுடு!

chandrababu naidu - 2026

பாவம் இந்த மனிதருக்கு வந்த வேதனையைப் பாருங்கள்!! வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீடு தேட பேசிக் கொண்டிருக்கிறார் தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு என்கிறார்கள் ஆந்திரப் பிரதேசத்தில்!

பிரஜா வேதிகை என்ற அரசு கட்டடத்தையே அக்கிரம கட்டடம் என்று சொல்லி ஜெகன்மோகன் ரெட்டி அரசு உடைத்து எறிந்து விட்டதால், புது வீடு தேடுவது மேல் என்று நாயுடுகாரு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

குண்டூர் மற்றும் விஜயவாடாவுக்கு விரைந்து சென்று சேரும் வகையில், தனது புதிய வீடு அமையும் படி, அருகில் இருக்கும் இடத்தில் வாடகைக்கு வீடு பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் சந்திர பாபு நாயுடு. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களிடமும் பேசியுள்ளார்.

‘கரகட்டு’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரஜா வேதிகையும், சந்திரபாபு நாயுடு தற்போது வசிக்கும் ‘லிங்கமனேனி’ கெஸ்ட் ஹவுஸும் பக்கத்து பக்கத்து கட்டடங்கள்தான்!

பிரஜாவேதிகை இரண்டு நாட்களாக இடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரும்புக் கூரைகளை நட்டு போல்டுகளை நீக்கி எடுத்து எறிந்துவிட்டால் முழுதாக தரைமட்டமாக்கப்பட்டு விடும். அதன் பின் அடுத்த குறி, தான் வசிக்கும் வீடு தான் என்று நாயுடு உணர்ந்து விட்டார்.

அதனால் அதற்கு முன்பே தான் காலி செய்துவிடுவது நல்லது என்று தீர்மானித்துள்ளார். அதன் மூலம், மானமாவது மிஞ்சும் என்று நினைக்கிறார் நாயுடு என்று கூறுகிறார்கள் தெலுங்கு தேசம் கட்சியினர்.

தலைநகர் அமராவதி அருகிலேயே இருக்கும் ‘உத்தண்ட ராயுனி பாலெம்’ என்ற இடத்தைச் சேர்ந்த சில தெலுங்கு தேசம் தலைவர்கள் சந்திரபாபுவுக்கு நிலம் அளிக்க முன்வந்துள்ளனர். அவர் வீடு கட்டிக் கொள்வதாக இருந்தால் தேவையான நிலத்தை அளிக்க மூன்று நான்கு பேர் வரை தயாராக இருக்கிறார்களாம்.

சந்திரபாபு வாடகை வீட்டுக்குப் போவாரா? சொந்தமாக வீடு கட்டிக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கின்றன ஆந்திர ஊடகங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories