உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி சாருலதா படேல் ஒட்டுமொத்தமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்
அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணிக்கு அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.
அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணிக்கு பியூஸ்கோயல் வாழ்த்து தெரிவித்தார்.