ஆளும் கட்சியின் தலைவர் ஒருவரை கடத்திய மாவோயிஸ்டுகள்

IMG 20190710 WA0018 - 2026

ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த தலைவரை மாவோயிஸ்டுகள் கடத்தி உள்ளனர்….

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த தலைவர், முன்னாள் எம் பி டி சி உறுப்பினர் ஸ்ரீனிவாசராவை மாவோயிஸ்டுகள் செவ்வாய்க்கிழமை விடிகாலை கடத்தியுள்ளார்கள்.

இதுவரை அவர் இருக்குமிடம் தெரியவில்லை. இதனால் குடும்பத்தார் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

விளை நிலங்களை லீசுக்கு எடுத்து பயிரிடும் விஷயத்தில் சீனிவாச ராவை கடத்திருப்பார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பயிரிடும் விஷயமாக  மலை வாழ் மக்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் பயிர் விளைவிக்கிறார்கள்.

மலைவாழ் இன மக்களுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு  எடுத்துக் கொண்டு பயிரிட்டு வருகிறார்கள்.

ஐந்தாண்டு காலத்திற்கு சீனிவாச ராவு இந்த பூமியை குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிகிறது.

நான்கு ஆண்டுகளாக ஸ்ரீநிவாச ராவு இந்த நிலத்தில் பருத்தியும் நெல்லும் பயிரிட்டு உள்ளார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

கொத்துரு என்ற இடத்தில் சீனிவாசராவு முன்பு எம்பிடிசி யாக பணியாற்றினார்.

ரிசர்வேஷன் காரணமாக இந்த முறை அவர் போட்டியிடவில்லை.

சீனிவாசராவ் கடத்தப்பட்ட விஷயமாக விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி சுனில்தத் தெரிவித்தார்.

சுமார் 15 பேர் ஆயுதங்களோடு வந்து 45 வயதான தன் கணவர் சீனிவாசராவை கடத்திச் சென்றதாக அவர் மனைவி துர்கா தெரிவித்தார்.

தன் கணவனை விடுவிக்கும்படி தானும் மகனும் குறுக்கிட்டபோது மாவோயிஸ்டுகள் தம்மை அடித்ததாக கூறினார்.

IMG 20190710 WA0019 - 2026அதுமட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

நான்கு டிராக்டர்களில் கிராமத்தார் செவ்வாயன்று அருகில் உள்ள சட்டீஸ்கர் காடுகளில் தேடுதலில் இறங்கினார்கள்.

ஆனால் சீனிவாசராவின் அடையாளம் தெரியவில்லை. மாவோயிஸ்டுகளிடமிருந்து எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories