கடத்தப்பட்ட டிஆர்எஸ் தலைவர் ஸ்ரீனிவாச ராவ், மாவோயிஸ்டுகளால் கொடூரக் கொலை!

telangana mla murdered1 - 2026கடத்திச் செல்லப்பட்ட டிஆர்எஸ் தலைவர் எம்பிடிசி ஸ்ரீனிவாசராவ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கம்மம் என்ற ஊரில் மாவோயிஸ்டுகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஸ்ரீனிவாச ராவ் கடத்தப் பட்டபோதே, மாவோயிஸ்டுகளின் வெறிச்செயல் குறித்து சந்தேகம் எழுந்தது. அதன்படியே நடந்து விட்டதாகக் கூறப் படுகிறது. இது, டிஆர்எஸ் தலைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்பிடிசியாக பணியாற்றிய சீனிவாசராவ் மாவோயிஸ்டுகளால் மிகக் கொடூரமாக கோடாலியால் வெட்டி கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘பாரம்பபாடு – புட்டபாடு’ சாலையில் வெள்ளிக்கிழமை இன்று மாலை அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் நடந்துள்ள இடத்தில் ரத்த வெள்ளத்தில் சீனிவாச ராவின் உடல் கிடந்துள்ளது. அவர் போலீஸாருக்கு இன்பார்மர் ஆக மாறி மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளைத் தெரிவித்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அதற்காக அவரை மாவோயிஸ்டுகள் கொன்று விட்டதாக மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.telangana mla - 2026

‘சார்ல’ பகுதியில் கமிட்டி செயலாளர் சாரதாவின் பெயரில் ஒரு கடிதத்தைக் மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ளனர். பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சார்ல மண்டலம் ‘பெத்தமிடிசிலேரு’ எம்பிடிசி.,யை (ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது) மாவோயிஸ்டுகள் ஜூலை 8ஆம் தேதி கடத்திச் சென்றனர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

அன்று இரவு ஆயுதங்களுடன் வந்த 15 மாவோயிஸ்டுகள் நல்லூர் சீனிவாச ராவின் வீட்டுக்கு வந்தார்கள். அவர் மனைவியையும் மகனையும் அடித்துத் துன்புறுத்தி,  ஸ்ரீனிவாசராவை தண்டகாரண்ய காடுகளுக்குள் கடத்திச் சென்றார்கள். வீட்டில் இருந்த அவருடைய மோட்டார் பைக்கையும் எடுத்துச் சென்றார்கள்.telangana mla murdered - 2026

அண்மைக் காலமாக சற்று அமைதியுடன் இருந்து வந்த மாவோயிஸ்டுகள், தற்போது மீண்டும் வாலாட்டும் வகையில், ஆளும் கட்சித் தலைவரை கடத்திச் சென்று கொன்றுள்ளனர். இது, உள்ளூர் மக்களைப் பெரிதும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.  இதை அடுத்து, டிஆர்எஸ்., தலைவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மாநிலத்தில் அச்சவுணர்வை ஏற்படுத்தி உள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories