கடத்தப்பட்ட டிஆர்எஸ் தலைவர் ஸ்ரீனிவாச ராவ், மாவோயிஸ்டுகளால் கொடூரக் கொலை!

telangana mla murdered1 - 2026கடத்திச் செல்லப்பட்ட டிஆர்எஸ் தலைவர் எம்பிடிசி ஸ்ரீனிவாசராவ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கம்மம் என்ற ஊரில் மாவோயிஸ்டுகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஸ்ரீனிவாச ராவ் கடத்தப் பட்டபோதே, மாவோயிஸ்டுகளின் வெறிச்செயல் குறித்து சந்தேகம் எழுந்தது. அதன்படியே நடந்து விட்டதாகக் கூறப் படுகிறது. இது, டிஆர்எஸ் தலைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்பிடிசியாக பணியாற்றிய சீனிவாசராவ் மாவோயிஸ்டுகளால் மிகக் கொடூரமாக கோடாலியால் வெட்டி கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘பாரம்பபாடு – புட்டபாடு’ சாலையில் வெள்ளிக்கிழமை இன்று மாலை அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் நடந்துள்ள இடத்தில் ரத்த வெள்ளத்தில் சீனிவாச ராவின் உடல் கிடந்துள்ளது. அவர் போலீஸாருக்கு இன்பார்மர் ஆக மாறி மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளைத் தெரிவித்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அதற்காக அவரை மாவோயிஸ்டுகள் கொன்று விட்டதாக மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.telangana mla - 2026

‘சார்ல’ பகுதியில் கமிட்டி செயலாளர் சாரதாவின் பெயரில் ஒரு கடிதத்தைக் மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ளனர். பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சார்ல மண்டலம் ‘பெத்தமிடிசிலேரு’ எம்பிடிசி.,யை (ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது) மாவோயிஸ்டுகள் ஜூலை 8ஆம் தேதி கடத்திச் சென்றனர்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அன்று இரவு ஆயுதங்களுடன் வந்த 15 மாவோயிஸ்டுகள் நல்லூர் சீனிவாச ராவின் வீட்டுக்கு வந்தார்கள். அவர் மனைவியையும் மகனையும் அடித்துத் துன்புறுத்தி,  ஸ்ரீனிவாசராவை தண்டகாரண்ய காடுகளுக்குள் கடத்திச் சென்றார்கள். வீட்டில் இருந்த அவருடைய மோட்டார் பைக்கையும் எடுத்துச் சென்றார்கள்.telangana mla murdered - 2026

அண்மைக் காலமாக சற்று அமைதியுடன் இருந்து வந்த மாவோயிஸ்டுகள், தற்போது மீண்டும் வாலாட்டும் வகையில், ஆளும் கட்சித் தலைவரை கடத்திச் சென்று கொன்றுள்ளனர். இது, உள்ளூர் மக்களைப் பெரிதும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.  இதை அடுத்து, டிஆர்எஸ்., தலைவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மாநிலத்தில் அச்சவுணர்வை ஏற்படுத்தி உள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories