இரவு 10 மணிக்கு மேல் கடை திறக்கலாமாம்… கொடை நடத்தக் கூடாதாம்.. என்னய்யா நியாயம்?!

radhapuram mla in assembly - 2026

உண்மையை உரக்கச் சொன்ன ராதாபுரம் எம்.எல்.ஏ.,வுக்கு நம் வாழ்த்துகள் என்று  பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் கொடை விழா நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடக்காமல் இருப்பதை சட்டப் பேரவையில் சுட்டிக் காட்டிய ராதாபுரம் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ.. இன்பதுரைக்கு இப்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சட்டமன்றத்தில் அதிரடியாக எடப்பாடி அரசு தவறுகள் சிலவற்றை அதிமுக எம்எல்ஏ சுட்டிக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ இன்பதுரை இன்று சட்டமன்றத்தில் அதிரடியாக சில கருத்துகளை முன்வைத்தார். அதில் முக்கியமான ஒரு கருத்து ஹிந்து இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்க காரணமாக அமைந்த கருத்து!

இது குறித்து இன்பதுரை இன்று சட்டமன்றத்தில் தன் கருத்தை முன்வைத்தபோது… திருநெல்வேலி மாவட்டத்தில் கொடை விழா என்ற வழிபாடு என்பது மிகவும் புகழ் பெற்றது. இந்த கொடைவிழா வழிபாடு நள்ளிரவு வரை நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பழக்கம் வந்திருக்கிறது… இரவு 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று கட்டுப்படுத்தி ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அது தவறு!

ஏனென்றால் இறை வழிபாட்டுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. தமிழக அரசு தற்போது புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது! இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில் செய்யலாம்; கடைகள் திறந்து இருக்கலாம் என்று ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது!

கடைகள் திறந்து வைக்கலாம் என்று ஒரு சட்டம் வந்திருக்கும் பொழுது 10 மணிக்கு மேல் கொடை நிகழ்ச்சி வழிபாடுகள் கூடாது என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று கூறினார்…

அவர் பேசியதன் காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories