நெல்லையப்பர் கோயிலில் அறநிலையத் துறை முறைகேட்டைக் கண்டித்து… ஜூலை 14ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

nellaiappar temple - 2026

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தென் மாவட்டத்தில் மிகப்பெரிய சிவாலய திருவிழா! இருப்பினும் அறநிலையத்துறையின் மெத்தனத்தால் திருவிழாவின் பொலிவு குன்றி வருவதும், ஆகம விரோதங்களும் நடப்பது பக்தர்களின் மனத்தை புண்படுத்தும் விதமாய் அமைந்திருக்கிறது.

இன்று (12.7.19) வெள்ளிக்கிழமை 7ஆம் திருநாள் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த வாகனமான வெள்ளி காமதேனுவுக்கு ஒரு கொம்பு இல்லை! கடந்த ஆண்டே இது மொறிந்து விட்டது. ஒரு வருடமாகக் கண்டு கொள்ளவில்லை!

மாதம் மாதம் உண்டியலைத் திறந்து லட்சகணக்கில் பணம், தங்கம், வெள்ளி அள்ள நேரம் இருக்கிறது;  தரிசன கட்டணம் வசூலிக்க நேரம் இருக்கிறது! ஆனால், அம்பாள் வாகனத்தை செப்பணிட நேரமில்லையா?

பின்னப்பட்ட உடைந்த வாகனத்தில் சுவாமியை கொண்டு வருவது பாவச் செயல்; ஆகம விரோதம் என்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லையா?!

எனவே, அறநிலையத் துறை அவலத்தை கண்டித்து நாளை மறுநாள் அதாவது, 14.7.18 ஞாயிறு மாலை 4 மணிக்கு பாளை மார்கெட் திடலில், நெல்லை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.  அனைவரும் இதில் கலந்து கொண்டு நெல்லையப்பர் ஆலயத்தில் நடக்கும் ஆகம விரோதச் செயல்களை, அறநிலையத்துறையின் அவலத்தை கண்டிக்க அணி திரண்டு வரவேண்டும்!

அநியாயத்தை கண்டுகொள்ளாமல் அமைதியாய் இருப்பதே பாவம்! மகாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உயிர் தத்தளிக்கும் போது அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்டான்… பீஷ்மர் பெரியவர்; நல்லவர்! அவர் இத்தகைய மோசமான சூழலைச் சந்திக்க… அவர் செய்த பாவம் என்ன என்று கேட்டான்!

கிருஷ்ணர் அதற்கு பதில் சொன்னார்… சபையில் திரௌபதிக்கு அநியாயம் நிகழ்ந்த போது பீஷ்மர் மௌனமாக இருந்தார். பாவச்செயலை செய்வது மட்டும் பாவமல்ல அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் பாவமே என்றார்!

அத்தகைய பாவச் செயலுக்கு நாம் இலக்காகக் கூடாது! ஆகம விரோதமாக ஆலய விழா நடத்தி வறட்சியையும் பஞ்சத்தையும் எதிர்கொள்ளக் கூடாது! ஊர் செழித்திட, நல்ல மழை பெய்திட,  திருவிழாவை குறைவின்றி நடத்துவோம். எனவே, அறநிலைய துறை அவலத்தை தட்டிக் கேட்போம் வாருங்கள்!

– கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories