நெல்லையப்பர் கோயிலில் அறநிலையத் துறை முறைகேட்டைக் கண்டித்து… ஜூலை 14ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

nellaiappar temple - 2026

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தென் மாவட்டத்தில் மிகப்பெரிய சிவாலய திருவிழா! இருப்பினும் அறநிலையத்துறையின் மெத்தனத்தால் திருவிழாவின் பொலிவு குன்றி வருவதும், ஆகம விரோதங்களும் நடப்பது பக்தர்களின் மனத்தை புண்படுத்தும் விதமாய் அமைந்திருக்கிறது.

இன்று (12.7.19) வெள்ளிக்கிழமை 7ஆம் திருநாள் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த வாகனமான வெள்ளி காமதேனுவுக்கு ஒரு கொம்பு இல்லை! கடந்த ஆண்டே இது மொறிந்து விட்டது. ஒரு வருடமாகக் கண்டு கொள்ளவில்லை!

மாதம் மாதம் உண்டியலைத் திறந்து லட்சகணக்கில் பணம், தங்கம், வெள்ளி அள்ள நேரம் இருக்கிறது;  தரிசன கட்டணம் வசூலிக்க நேரம் இருக்கிறது! ஆனால், அம்பாள் வாகனத்தை செப்பணிட நேரமில்லையா?

பின்னப்பட்ட உடைந்த வாகனத்தில் சுவாமியை கொண்டு வருவது பாவச் செயல்; ஆகம விரோதம் என்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லையா?!

எனவே, அறநிலையத் துறை அவலத்தை கண்டித்து நாளை மறுநாள் அதாவது, 14.7.18 ஞாயிறு மாலை 4 மணிக்கு பாளை மார்கெட் திடலில், நெல்லை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.  அனைவரும் இதில் கலந்து கொண்டு நெல்லையப்பர் ஆலயத்தில் நடக்கும் ஆகம விரோதச் செயல்களை, அறநிலையத்துறையின் அவலத்தை கண்டிக்க அணி திரண்டு வரவேண்டும்!

அநியாயத்தை கண்டுகொள்ளாமல் அமைதியாய் இருப்பதே பாவம்! மகாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உயிர் தத்தளிக்கும் போது அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்டான்… பீஷ்மர் பெரியவர்; நல்லவர்! அவர் இத்தகைய மோசமான சூழலைச் சந்திக்க… அவர் செய்த பாவம் என்ன என்று கேட்டான்!

கிருஷ்ணர் அதற்கு பதில் சொன்னார்… சபையில் திரௌபதிக்கு அநியாயம் நிகழ்ந்த போது பீஷ்மர் மௌனமாக இருந்தார். பாவச்செயலை செய்வது மட்டும் பாவமல்ல அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் பாவமே என்றார்!

அத்தகைய பாவச் செயலுக்கு நாம் இலக்காகக் கூடாது! ஆகம விரோதமாக ஆலய விழா நடத்தி வறட்சியையும் பஞ்சத்தையும் எதிர்கொள்ளக் கூடாது! ஊர் செழித்திட, நல்ல மழை பெய்திட,  திருவிழாவை குறைவின்றி நடத்துவோம். எனவே, அறநிலைய துறை அவலத்தை தட்டிக் கேட்போம் வாருங்கள்!

– கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories