நெல்லையப்பர் கோயிலில் அறநிலையத் துறை முறைகேட்டைக் கண்டித்து… ஜூலை 14ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

nellaiappar temple - 2026

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தென் மாவட்டத்தில் மிகப்பெரிய சிவாலய திருவிழா! இருப்பினும் அறநிலையத்துறையின் மெத்தனத்தால் திருவிழாவின் பொலிவு குன்றி வருவதும், ஆகம விரோதங்களும் நடப்பது பக்தர்களின் மனத்தை புண்படுத்தும் விதமாய் அமைந்திருக்கிறது.

இன்று (12.7.19) வெள்ளிக்கிழமை 7ஆம் திருநாள் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த வாகனமான வெள்ளி காமதேனுவுக்கு ஒரு கொம்பு இல்லை! கடந்த ஆண்டே இது மொறிந்து விட்டது. ஒரு வருடமாகக் கண்டு கொள்ளவில்லை!

மாதம் மாதம் உண்டியலைத் திறந்து லட்சகணக்கில் பணம், தங்கம், வெள்ளி அள்ள நேரம் இருக்கிறது;  தரிசன கட்டணம் வசூலிக்க நேரம் இருக்கிறது! ஆனால், அம்பாள் வாகனத்தை செப்பணிட நேரமில்லையா?

பின்னப்பட்ட உடைந்த வாகனத்தில் சுவாமியை கொண்டு வருவது பாவச் செயல்; ஆகம விரோதம் என்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லையா?!

எனவே, அறநிலையத் துறை அவலத்தை கண்டித்து நாளை மறுநாள் அதாவது, 14.7.18 ஞாயிறு மாலை 4 மணிக்கு பாளை மார்கெட் திடலில், நெல்லை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.  அனைவரும் இதில் கலந்து கொண்டு நெல்லையப்பர் ஆலயத்தில் நடக்கும் ஆகம விரோதச் செயல்களை, அறநிலையத்துறையின் அவலத்தை கண்டிக்க அணி திரண்டு வரவேண்டும்!

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

அநியாயத்தை கண்டுகொள்ளாமல் அமைதியாய் இருப்பதே பாவம்! மகாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உயிர் தத்தளிக்கும் போது அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்டான்… பீஷ்மர் பெரியவர்; நல்லவர்! அவர் இத்தகைய மோசமான சூழலைச் சந்திக்க… அவர் செய்த பாவம் என்ன என்று கேட்டான்!

கிருஷ்ணர் அதற்கு பதில் சொன்னார்… சபையில் திரௌபதிக்கு அநியாயம் நிகழ்ந்த போது பீஷ்மர் மௌனமாக இருந்தார். பாவச்செயலை செய்வது மட்டும் பாவமல்ல அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் பாவமே என்றார்!

அத்தகைய பாவச் செயலுக்கு நாம் இலக்காகக் கூடாது! ஆகம விரோதமாக ஆலய விழா நடத்தி வறட்சியையும் பஞ்சத்தையும் எதிர்கொள்ளக் கூடாது! ஊர் செழித்திட, நல்ல மழை பெய்திட,  திருவிழாவை குறைவின்றி நடத்துவோம். எனவே, அறநிலைய துறை அவலத்தை தட்டிக் கேட்போம் வாருங்கள்!

– கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories