குர்ஆன் விநியோக ‘ப்ளாக்மெயில்’ செய்த நீதிபதிக்கு புறக்கணிப்பு: ராஞ்சி பார் அசோஷியேன்!

lawyers in ranchi court - 2026

ராஞ்சி பார் அசோஷியேன் இன்று ஒரு அதிரடி முடிவை அறிவித்து பல தரப்பிடம் இருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ரிச்சா பாரதி என்ற 19 வயது கல்லூரிப் பெண் சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் பதிவில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அண்மையில் இறந்த தப்ரீஸ் மகன், தன் தந்தைக்கு ஏற்பட்ட நிலைக்காக ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வது? என்று கேட்கப்பட்ட ஒரு பதிவுக்கு, காஷ்மீர் பண்டிட்டுகள் குடும்பத்திலிருந்து யாரும் அப்படி உருவாகவில்லையே! என்று அவர் பதில் பதிவு செய்திருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்காக, இரு சமூகங்களுக்கு இடையில் விரோதத்தைத் தூண்டும் வகையில் கருத்தைப் பதிவு செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

richa bharti1 - 2026இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப் பட்டார். அதில் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெற வேண்டுமானால், ரிச்சி பாரதி 5 குர்ஆன் நூல்களை வாங்கி, விநியோகிக்க வேண்டும் என்று ராஞ்சி நீதிமன்றத்தில் நீதிபதி மனீஷ் குமார் சிங் தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த ரிச்சா பாரதி, முதலில் குர்ஆன் புத்தகம் வழங்கச் சொல்வீர்கள், பிறகு மண்டியிடச் சொல்வீர்கள், பின்னர் இஸ்லாமாக மாறு என்பீர்கள்… இதெல்லாம் சரிப்படாது என்று கூறி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பும், அவரது பதிலும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்து இயக்கங்கள் இந்தத் தீர்ப்பு குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தன. போராட்டங்களும் நடந்தன.

இந்நிலையில், ரிச்சா பாரதிக்கு ஆதரவு அளித்துள்ள ராஞ்சி நீதிமன்ற வழக்குரைஞர்கள், ஒருமனதாக ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி, சம்பந்தப்பட்ட நீதிபதி முன் எந்த வழக்கையும் கையில் எடுத்து வாதாடப் போவதில்லை என்றும், தாங்கள் இந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப் படும் வரையில் நீதிமன்றத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர். அதே நேரம் இது தொடர்பாக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Entertainment News

Popular Categories