ரயிலில் இருந்து விழுந்த பயணி ! அறுந்த குடலை அள்ளிக் கொண்டு அருகிலிருக்கும் நிலையம் சென்ற பரிதாபம் !

thandavalam 1 - 2026கடந்த திங்கள் கிழமை சங்கமித்ரா விரைவு ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சௌதான், அவரின் நண்பர் பிரவீன், மேலும் சில சுரங்கத் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் வேலை தேடி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.

தொழிலாளர்கள் அனைவரும் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்துள்ளனர்.அவர்களுடன் சேர்ந்து சுனிலும் கதவுக்கு அருகில் கீழே அமர்ந்தவாறு தூங்கியிருக்கிறார்.  அன்று நள்ளிரவு 2 மணியளவில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது கதவு வழியாக வெளியில் விழுந்துள்ளார். ரயில் செல்லும் சத்தத்தில் அவர் வெளியில் விழுந்தது அருகிலிருந்த யாருக்கும் கேட்கவில்லை.train - 2026வாராங்கல் மாவட்டத்தில் உள்ள உப்பல் ரயில் நிலையத்தைக் கடந்து சிறிது தூரத்தில் அவர் விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் தண்டவாளத்துக்கு அருகிலிருந்த இரும்புக் கம்பியில் பலமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் சுனிலின் வயிறு கிழிக்கப்பட்டு உள்ளே இருந்த குடல் தெரிந்துள்ளது. அந்த இருட்டில் செல்போன் கீழே விழுந்ததையும் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நீண்ட நேரம் உதவிக்காகப் போராடியுள்ளார் சுனில். ஆனால் யாரும் வரவில்லை.

kudal e1563967964416 - 2026இறுதியாக தன் சட்டையைக் கழற்றி வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு 10 கி.மீ தூரம் வரை தண்டவாளத்திலேயே நடந்து சென்றுள்ளார். ஹசன்பர்தி ரயில் நிலையம் வந்த பிறகு அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக அதிகாரிகளை உஷார்படுத்தி ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சுனில் வாராங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வயிறு, குடல் மட்டுமில்லாது தண்டுவடம், கை, கால் மூட்டுகளிலும் அவருக்குப் பலத்த அடிபட்டுள்ளது. பின்னர் சுனிலுக்கு நினைவு வந்து அவரின் சகோதரர் பிரவீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சகோதரரும் அவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். சுனில் மது போதையினால் கீழே விழுந்திருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட நிலையில், விபத்து அன்று அவர் மது அருந்தவில்லை என்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories