சிம்ஹாசலம் மலை மீது ஏறிய போது… கல் தலையில் விழுந்து பெண் பக்தர் பரிதாப மரணம்!

simhachalam steps - 2026

சிம்ஹாசலம் படிக்கட்டு வழியே சுவாமி தரிசனத்திற்கு சென்ற பெண் மரணம் அடைந்தார். தெய்வ தரிசனத்திற்கு போகும்போது அவரைப் பின்தொடர்ந்த மரணம்  பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்ஹாசலம் ஸ்ரீலட்சுமி வராஹர் ஆலயத்திற்கு புதன்கிழமை சென்றபோது இரு பெண்களுக்கு நடந்த சோகச் சம்பவம் இது. மலைப் பாதையில் படிக்கட்டில் ஏறிய போது, கல் தலை மேல் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டும், இன்னொரு பெண்ணுக்கு  தீவிர காயம் ஏற்பட்டுள்ளதும் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிம்மாசலம் ஆலய படிக்கட்டு பகுதியில் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் மேலிருந்து கற்கள் நழுவி பக்தர்களின் மேல் விழுந்தன. அந்த விபத்தில் இருவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டன. உடன் இருந்த பக்தர்கள் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் மரணம் அடைந்தார். அவர் தலையில் கல் பலமாகத் தாக்கியதால் அப் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பெண்ணின் காலில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், “சப்பவரம்” என்ற ஊரைச் சேர்ந்த பவானி என்று அடையாளம் காணப் பட்டுள்ளது.  தரிசனத்திற்குச் சென்ற பெண் மரணம் அடைந்ததால் சப்பவரம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது .

ஆலய பணியாளர்களின் அலட்சியப் போக்கின் காரணமாகவே பெண் உயிரிழந்தார் என்ற பக்தர்களும் உள்ளூர் வாசிகளும் குற்றம் சாட்டினர். கோயிலில் படிக்கட்டுகளில் மராமத்து பணி நடப்பதாக பக்தர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படியும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories