‘தொரட்டி’ நாயகியின் சோகம்! தயாரிப்பாளர் மீது போலீஸில் புகார்!

Published:

satyakala1 - 2026அவதூறு பரப்பி வரும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொரட்டி படத்தின் நாயகி சத்யகலா கோவை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்த நடிகை சத்யகலா, பின்னர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது… ’தொரட்டி’ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஷமனுடன் #ShamanMithru மேற்கொண்ட ஒப்பந்தப்படி படத்தில் நடித்துக் கொடுத்து விட்டேன்.

satyakala - 2026படத்தின் இசை வெளியீட்டிலும் நான் பங்கேற்றேன். இடையே எனக்கும் தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் என் பெற்றோரிடம் வந்து விட்டேன்.

படத்தின் விளம்பரத்துக்காக ஷமன் என்னைப் பற்றி தவறான கருத்துக் களைப் பரப்பி வருகிறார். எனக்கு வழங்க வேண்டிய சம்பளத்தையும் வழங்கவில்லை. இதனால் நானும் என் குடும்பத்தினரும் வேதனை அடைந்து இருக்கிறோம்.

thoratti - 2026இதற்காக ஷமன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும். தவறான தகவல் பரப்பியதற்காக அவர் மீது எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன். மேலும் மான நஷ்ட வழக்கும் தொடர்ந்து உள்ளேன்… என்று நடிகை சத்யகலா செய்தியாளர்களிடம் கூறினார்!

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

முன்னதாக, ஷமன் இதுகுறித்து ஒரு மனு கொடுத்திருந்தார். அதனை தனது டிவிட்டர் பதிவிலும் பகிர்ந்திருந்தார். அதில் #Thorati கதாநாயகி சத்யா-வை மீட்கக்கோரி கதாநாயகன் @shamanmithru #highcourt ல் மனு சத்யாவின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் முடிப்பதற்காக அவரது தந்தை ரத்தினம் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக ஷமன் பிக்சர்ஸ் பங்குதாரர் என்ற முறையில் மனு  !

Related articles

Recent articles

spot_img