பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அரசுக்குக் கிடைத்தது. இத்தகவலை அடுத்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் முழு எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரின், வாயில்களில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அங்கு சுமார் 10,000 பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதைவிட மும்மடங்குப் படை கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சுதந்திரதினம் வர இருப்பதால் பயங்கரவாதிகள் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் ! பயங்கரவாதிகள் ஊடுருவல் ?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari