என்ன நடக்கிறது தெரியவில்லை?! காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் கருத்து!

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. தேசிய ஊடகங்களில் இதுகுறித்த கிசு கிசுக்கள் அதிகம் உலா வருகின்றன.

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் என தகவல் வெளியானது.

இதனை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது குறித்து அதிகம் விவாதங்கள் எழுந்து வருகின்றன பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு என்பது வழக்கமான ஒன்று என்றும் பாகிஸ்தான் தொடர்பிலான பயங்கரவாதிகளை கொடுக்கும் நடவடிக்கை என்றும் தாக்குதலை முறியடிக்க இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது தான் என்றும் மாநில அரசு கூறி வருகிறது மேலும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.  அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்டது.

மேலும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப் பட்டது.

அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு படைகள் குவிப்பு ஆகியவற்றாலும் அமர்நாத் யாத்திரைக்கு ஏற்பட்டுள்ள தடையின் காரணத்தாலும் காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு நிலவி வருகிறது

இதனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்று காஷ்மீர் மாநில அரசியல் கட்சியினர் மற்றும் பயங்கரவாத இயக்கங்களுடனான தொடர்பில் உள்ள அடிப்படைவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன

இந்த நிலையில்தான் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் பகுதியை union territory அந்தஸ்துடனும் யூனியன் பிரதேசங்கள் என்ற அந்தஸ்துடனும் ஜம்முவை மாநிலமாக மாற்றுவதாகவும் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

இதனால் அச்சமடைந்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு இது போன்று அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறது நேற்று இதுகுறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது.

காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என அம்மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவுகளின் இதனை வெளிப்படுத்தி வருகிறார்

#Kashmir | #CentralGovt

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories