மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டமும், போட்டியும் அதிகரித்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.]
முன்பெல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு பிரதமர் பதவிக்கு இருவர் அல்லது மூன்று பேர்தான் போட்டியிட்டார்கள் ஆனால் மோடியின் ஆட்சியிலோ, ஒரே ஒரு பிரதமர் நாற்காலிக்கு / பிரதமர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துவிட்டது.
இதன் மூலம் வேலைவெட்டியில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், அதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருப்பதும், வேலைக்கான போட்டி அதிகரித்திருப்பதும் கண்கூடாகத் தெரிகிறது என்கிறார்கள்!