
இஸ்லாமியர்கள் பேசுவதை மட்டும் குறிப்பு எடுத்து புகார்கள் கூறி, போலீசில் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டும் பாஜக.,வினர், ஓர் இந்துவான இவர் மீது தைரியமிருந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
அவர் யார் என்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் லெட்டர் பேட் கட்சி நடத்தி தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பன்ருட்டி வேல்முருகன் தான் என்கிறார்கள் பின்னூட்டங்களில்!
பாமக., எம்.எல்.ஏ.,வாக இருந்து, கட்சியால் ஓரங்கட்டப் பட்டு, பின்னர் கழற்றி விடப் பட்ட பன்ருட்டி வேல்முருகன், சொற்ப ஆதரவாளர்கள் துணையுடன் வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கினார்.
ஆனால் இவர், தமிழகத்தில் பிரிவினைவாத இயக்கங்கள், அடிப்படைவாத இயக்கங்கள், கிறிஸ்துவ சர்ச் பிரசாரங்களின் ஊதுகுழலாக செயல்பட்டு வருவதாக புகார்கள் முன்வைக்கப் பட்டன. அதற்கு ஏற்ற வகையில் அவர் மேடைகளில் பேசியும் வந்தார்.
இந்நிலையில், அதனை உறுதிப் படுத்தும் வகையில் தற்போது அவர் பேசியுள்ளதை சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவரது அந்தப் பேச்சு….

