இந்துவான இவன் மீது தைரியமிருந்தால் நடவடிக்கை எடுங்கள்! பாஜக.,வுக்கு சவால்!

Published:

velmurugan - 2026

இஸ்லாமியர்கள் பேசுவதை மட்டும் குறிப்பு எடுத்து புகார்கள் கூறி, போலீசில் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டும் பாஜக.,வினர், ஓர் இந்துவான இவர் மீது தைரியமிருந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

அவர் யார் என்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் லெட்டர் பேட் கட்சி நடத்தி தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பன்ருட்டி வேல்முருகன் தான் என்கிறார்கள் பின்னூட்டங்களில்!

பாமக., எம்.எல்.ஏ.,வாக இருந்து, கட்சியால் ஓரங்கட்டப் பட்டு, பின்னர் கழற்றி விடப் பட்ட பன்ருட்டி வேல்முருகன், சொற்ப ஆதரவாளர்கள் துணையுடன் வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கினார்.

ஆனால் இவர், தமிழகத்தில் பிரிவினைவாத இயக்கங்கள், அடிப்படைவாத இயக்கங்கள், கிறிஸ்துவ சர்ச் பிரசாரங்களின் ஊதுகுழலாக செயல்பட்டு வருவதாக புகார்கள் முன்வைக்கப் பட்டன. அதற்கு ஏற்ற வகையில் அவர் மேடைகளில் பேசியும் வந்தார்.

இந்நிலையில், அதனை உறுதிப் படுத்தும் வகையில் தற்போது அவர் பேசியுள்ளதை சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவரது அந்தப் பேச்சு….

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img