முதல் சுதந்திரக் குரல் தந்த பூலித்தேவனின் 304வது பிறந்தநாள்! ஓபிஎஸ்., அரசு மரியாதை!

Published:

poolithevar - 2026

இந்திய சுதந்திர வரலாற்றில், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலடி வைத்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிய தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு, முதல் சுதந்திரக் குரலைப் பதிவு செய்து, தமிழினத்தின் வீரத்தைக் காட்டிய மாமன்னன் பூலித்தேவனின் 304வது பிறந்த நாள் இன்று அரசு சார்பில் கொண்டாடப் பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 304 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர்.கே.ராஜூ, ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன், ஜீ.பாஸ்கரன் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

nellai collector ops - 2026

முன்னதாக, தமிழக துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் நெல்லைக்கு வருகை தந்தார். திருநெல்வேலி மாவட்ட எல்லையில் அவரை வரவேற்ற நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு தெரிவித்தார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img