கர்நாடக மாநில அரசு மேகதாது பகுதியில் புதியஅணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில், காவிரி பாசனப் பகுதிகளில் ஆதரவு காணப்பட்டது. மற்ற இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை. மன்னார்குடி அருகே கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதம் பந்த் அறிவிக்கப்பட்டிருந்த போதும் தொழில் நகரமான கோவையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. பொள்ளாச்சியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த போதிலும் பஸ்கள் எப்போதும் போல் இயக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல்லில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை. மதுரையில் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை. சென்னையில் கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையம் வழக்கம்போல் இயங்கின. அதனால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை.
முழு அடைப்பு: காவிரி பாசனப் பகுதிகளில் ஆதரவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari