
பிரதமர் மோடி மீண்டும் வரலாறு படைக்க தமிழகம் வருவார் என்று குறிப்பிட்டு தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ்., மகன் ஓ.பி.ரவீந்திரநாத்.
மோடி வேட்டி கட்டிய தமிழனின் அடையாளத்தை வெளிப்படுத்தியது குறித்து மகிழ்ச்சியுடன் கருத்துப் பதிவு செய்துள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத்.
முன்னதாக, மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, மாமல்லபுரத்திற்கு சிறப்பான வருகை தரும் நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்களையும், நட்பு நாடான சீனத்தின் மாண்புமிகு அதிபர் ஜி ஜின் பிங் அவர்களையும், அஇஅதிமுக வின் கழக மக்களவைத் தலைவர் என்ற முறையிலும் அன்னைத்தமிழின் இனிமையுடனும், வருக!வருக! என வணங்கி வாழ்த்தி வரவேற்கிறேன்! – என்று பதிவிட்டிருந்தார்.
எளிமையாய் தனது பாணியிலேயே தமிழ் மண்ணில் தடம் பதித்த நமது பாரத பிரதமருக்கு கோடான கோடி வணக்கங்கள் ???? அன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிய உடை மாற்றம், இன்று பிதாவின் பாதையிலே பிரதமரின் இனிய எழில்தோற்றம். வரலாறு படைக்கும் தமிழர் தோற்றத்தினை வாழ்த்தி வரவேற்கிறேன். #TNWelcomesModi
பிரதமர் மோடி மாமல்லபுரம் பகுதியில் கடற்கரையில் காலை நேர நடைப்பயிற்சியின் போது கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணியில் இருந்த வீடியோ பதிவைப் பகிர்ந்த ஓபி ரவீந்திரநாத்,
“நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி” எனும் பொன்மனம் படைத்த பிரதமரின் பொற்கரங்களால் கங்கை மட்டுமல்ல ! வங்கக்கடற்கரையும் தூய்மை ஆனது !! பாரே வியக்கும் பாரதப்பிரதமரின் செயல்களைப் போற்றி வணங்குகிறேன்???? @narendramodi @PMOIndia – என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மண்ணில் தன்னிகரற்ற ஒரு அடையாளத்தை விட்டுச்செல்லும் நீங்கள் மக்கள் மனதில் தடம் பதித்து செல்கிறீர்கள்,மண்ணின் புகழை உணர்ந்து அந்த மண்ணிற்கு ஏற்ப தன்னை அடையாளப் படுத்தி, எங்களை கவர்ந்த நீங்கள் மீண்டும் வரலாறு படைக்க தமிழகம் வருவீர்கள் என்று நம்பிக்கையோடு நான்.
@narendramodi – என்று டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் அதிமுக., மக்களவை உறுப்பினரும், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,ஸின் மகனுமான ஒ.பி.ரவீந்திரநாத்
- ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!
- மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
- சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!
- ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…
- நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!



