காட்டிக்கொடுத்த ஸ்ரீ நரசிம்மர் ? திருடர்கள் கைது நகை மீட்பு

பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர்.
கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்ப்படுத்தியது
பாவூர்சத்திரம் காவலர்கள் விழாக்காலம் என்பதால் இரவு பகல் பாராது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் இந்நிலையில் கடந்த 28.12.16 அன்று காலையில் கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவில் கதவுகளை உடைத்து திருட முயற்சி நடந்து இதில் உஷாரான காவல்துறை தேடுதல் வேட்டையினை தீவிரப்படுதியுள்ளனர் சம்பவதன்று
பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ,தலைமைக்காவலர்கள் அல்போன்ஸ் ,இம்மானுவேல்ஜெயசிங், ,சொரிமுத்து ,உதயசூரியன் ,தனிப்படைச் சேர்ந்த மோகன் உள்ளிட்ட போலீசார் பாவூர்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காவலர்களைக் கண்டதும் கையில்இருந்த பையை வீசியுள்ளார் இதில் சந்தேகபப்பட்டு போலீசார் விசாரிக்கும்போது அவர் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த நடராஜன்(39) என்பது தெரியவந்தது அவனது பதில் முன்னுக்கு பின் முரணான இருக்கவே சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சேர்மத்துரை(23) மற்றும் மேலபட்டமுடையார்புரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம்(39) ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாவூர்சத்திரம், கீழப்பாவூர், தென்காசி மற்றும் ஊத்துமலை பகுதிகளில் பகலில் நோட்டமிட்டு, இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து தங்கநகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் திருட முயற்சி நடந்த அன்றே திருடர்கள் பிடிபட்டது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது ஸ்ரீ நரசிம்மர் உக்கிரமானவர் தவறு செய்பவர்ககளை உடனே தண்டிப்பார் என்ற சொல் நிரூபணமாகியுள்ளது என்பதே மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக உள்ளது
திருடர்களைப் பிடித்த காவலர்களுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories