குற்றால அருவியில் குளிக்க தடை

Published:

courtallam falls aug09 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை தென்காசி ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது

குற்றால மலைப்பகுதியில் மழை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித் தீர்ப்பதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் நேற்று காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர்

இந்நிலையில் நேற்று மதியம் சிறிது நீர்வரத்து குறைந்து பாதுகாப்பான அளவில் இருந்ததை அடுத்து குளிப்பதற்கு போலீசார் அனுமதித்தனர். இருப்பினும் மாலை நேரம் கன மழை பெய்ததால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

IMG 20191021 WA0003 - 2026
குற்றால அருவியில் அதிகரித்துள்ள நீர்வரத்து அக்டோபர் 20 இன்று காலை நிலவரம்

இதையடுத்து நேற்று மாலை விதிக்கப்பட்ட தடை இன்று காலை வரை தொடர்ந்தது

Related articles

Recent articles

spot_img