சென்னை: மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானியத் திட்டத்தை தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அமல்படுத்தியது. இந்த நேரடி மானிய திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை கருணைக் காலமாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. அதன்படி, நாளையுடன் இந்த கருணைக் காலம் முடிவடைகிறது. கருணைக் காலத்துக்குள் மானிய திட்டத்தில் இணையாதவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சந்தை விலையில்தான் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அவர்கள் மானிய திட்டத்தில் இணைந்த பிறகு மானிய தொகை தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கருணை காலத்தில் சமையல் கேஸ் நேரடி மானியத்தில் இணைந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானிய தொகை மொத்தமாக சேர்க்கப்பட்டு விடும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் சேர்வதற்கான கெடு: நாளையுடன் முடிவடைகிறது!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

