December 7, 2025, 11:41 PM
24.6 C
Chennai

சென்னைச் சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது!

ashwatha biju cover photo - 2025

சென்னையைச் சேர்ந்த சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப் படும் பிரதம மந்திரியின் பால புரஸ்கார் அறிவிக்கப் பட்டுள்ளது.

14 வயதாகும் சிறுமி அஸ்வதா பிஜு, தற்போது இந்தியாவின் மிக இளைய வயதின் பேலியன்டாலஜிஸ்ட் ஆகத் திகழ்கிறார். பேலியன்டாலஜிஸ்ட் என்பது புதைபடிவ பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது. சிறிய வயதிலேயே இவருக்கு புதைபடிவ பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததாக இவரின் தாயார் கூறுகிறார்.

ashwatha biju4 - 2025

சிறுவயதில் இருந்தே புதைப் படிவப் பொருட்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். அதன் காரணமாகத்தான் தற்போது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது தற்போது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த ஆண்டுக்கான விருதுக்கு 29 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களில் நம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.

ashwatha biju5 - 2025

பிரதம மந்திரியின் பால புரஸ்கார் விருது பெற்றுள்ள அஸ்வதா பிஜுவின் தாயார் விஜயராணி கூறுகையில், “3 வயதில் இருந்தே இவருக்கு சிப்பிகள் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. தகவல் களஞ்சிய நூல்களான என்சைக்ளோபீடியா புத்தகங்களைப் படிப்பதில் அவளுக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. சிறு வயதில் எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகு அவள் பலமுறை அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தாள். அதன் மூலம் அவளுக்கு புதை படிமங்கள் மீது அதிக ஆர்வம் வந்தது” என்றார்.

ashwatha biju6 - 2025

அஸ்வதா பிஜு, புதை படிவங்கள் தொடர்பான பொருட்களை சேகரித்து வைப்பதிலும், அது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறாள். இதுவரை அஸ்வதா, 75 விதமான புதைப்படிவ பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறாள். அதற்காக ஒரு தனி அறையை இவளுக்கென ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ashwatha biju7 - 2025

தான் சேகரித்து வைத்திருக்கும் பொருள்கள் தொடர்பாக விவரங்களைச் சேகரித்து, அதை புகைப்படங்களாகவும் விவரக் குறிப்புகளாகவும் எழுதி, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கருத்தரங்குகளில் காட்சிப் படுத்தியிருக்கிறாள். புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முன் தான் சேகரித்து வைத்த பொருள்களைக் குறித்துக் காட்டி, விளக்கங்களை அளித்து, அவர்களிடம் இருந்தும் மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறாள்.

இந்தப் புதைப்படிவப் பொருள்களின் மூலம், உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தி வருகிறாள் அஸ்வதா பிஜு. அவளது துடிப்பான ஆர்வத்தைப் பாராட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories