சென்னைச் சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது!

ashwatha biju cover photo - 2026

சென்னையைச் சேர்ந்த சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப் படும் பிரதம மந்திரியின் பால புரஸ்கார் அறிவிக்கப் பட்டுள்ளது.

14 வயதாகும் சிறுமி அஸ்வதா பிஜு, தற்போது இந்தியாவின் மிக இளைய வயதின் பேலியன்டாலஜிஸ்ட் ஆகத் திகழ்கிறார். பேலியன்டாலஜிஸ்ட் என்பது புதைபடிவ பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது. சிறிய வயதிலேயே இவருக்கு புதைபடிவ பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததாக இவரின் தாயார் கூறுகிறார்.

ashwatha biju4 - 2026

சிறுவயதில் இருந்தே புதைப் படிவப் பொருட்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். அதன் காரணமாகத்தான் தற்போது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது தற்போது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த ஆண்டுக்கான விருதுக்கு 29 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களில் நம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.

ashwatha biju5 - 2026

பிரதம மந்திரியின் பால புரஸ்கார் விருது பெற்றுள்ள அஸ்வதா பிஜுவின் தாயார் விஜயராணி கூறுகையில், “3 வயதில் இருந்தே இவருக்கு சிப்பிகள் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. தகவல் களஞ்சிய நூல்களான என்சைக்ளோபீடியா புத்தகங்களைப் படிப்பதில் அவளுக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. சிறு வயதில் எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகு அவள் பலமுறை அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தாள். அதன் மூலம் அவளுக்கு புதை படிமங்கள் மீது அதிக ஆர்வம் வந்தது” என்றார்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!
ashwatha biju6 - 2026

அஸ்வதா பிஜு, புதை படிவங்கள் தொடர்பான பொருட்களை சேகரித்து வைப்பதிலும், அது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறாள். இதுவரை அஸ்வதா, 75 விதமான புதைப்படிவ பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறாள். அதற்காக ஒரு தனி அறையை இவளுக்கென ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ashwatha biju7 - 2026

தான் சேகரித்து வைத்திருக்கும் பொருள்கள் தொடர்பாக விவரங்களைச் சேகரித்து, அதை புகைப்படங்களாகவும் விவரக் குறிப்புகளாகவும் எழுதி, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கருத்தரங்குகளில் காட்சிப் படுத்தியிருக்கிறாள். புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முன் தான் சேகரித்து வைத்த பொருள்களைக் குறித்துக் காட்டி, விளக்கங்களை அளித்து, அவர்களிடம் இருந்தும் மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறாள்.

இந்தப் புதைப்படிவப் பொருள்களின் மூலம், உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தி வருகிறாள் அஸ்வதா பிஜு. அவளது துடிப்பான ஆர்வத்தைப் பாராட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

ALSO READ:  செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories