March 25, 2025, 2:02 PM
32.4 C
Chennai

சென்னைச் சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது!

சென்னையைச் சேர்ந்த சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப் படும் பிரதம மந்திரியின் பால புரஸ்கார் அறிவிக்கப் பட்டுள்ளது.

14 வயதாகும் சிறுமி அஸ்வதா பிஜு, தற்போது இந்தியாவின் மிக இளைய வயதின் பேலியன்டாலஜிஸ்ட் ஆகத் திகழ்கிறார். பேலியன்டாலஜிஸ்ட் என்பது புதைபடிவ பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது. சிறிய வயதிலேயே இவருக்கு புதைபடிவ பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததாக இவரின் தாயார் கூறுகிறார்.

சிறுவயதில் இருந்தே புதைப் படிவப் பொருட்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். அதன் காரணமாகத்தான் தற்போது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது தற்போது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த ஆண்டுக்கான விருதுக்கு 29 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களில் நம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.

பிரதம மந்திரியின் பால புரஸ்கார் விருது பெற்றுள்ள அஸ்வதா பிஜுவின் தாயார் விஜயராணி கூறுகையில், “3 வயதில் இருந்தே இவருக்கு சிப்பிகள் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. தகவல் களஞ்சிய நூல்களான என்சைக்ளோபீடியா புத்தகங்களைப் படிப்பதில் அவளுக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. சிறு வயதில் எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகு அவள் பலமுறை அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தாள். அதன் மூலம் அவளுக்கு புதை படிமங்கள் மீது அதிக ஆர்வம் வந்தது” என்றார்.

அஸ்வதா பிஜு, புதை படிவங்கள் தொடர்பான பொருட்களை சேகரித்து வைப்பதிலும், அது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறாள். இதுவரை அஸ்வதா, 75 விதமான புதைப்படிவ பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறாள். அதற்காக ஒரு தனி அறையை இவளுக்கென ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

தான் சேகரித்து வைத்திருக்கும் பொருள்கள் தொடர்பாக விவரங்களைச் சேகரித்து, அதை புகைப்படங்களாகவும் விவரக் குறிப்புகளாகவும் எழுதி, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கருத்தரங்குகளில் காட்சிப் படுத்தியிருக்கிறாள். புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முன் தான் சேகரித்து வைத்த பொருள்களைக் குறித்துக் காட்டி, விளக்கங்களை அளித்து, அவர்களிடம் இருந்தும் மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறாள்.

இந்தப் புதைப்படிவப் பொருள்களின் மூலம், உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தி வருகிறாள் அஸ்வதா பிஜு. அவளது துடிப்பான ஆர்வத்தைப் பாராட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories