திருச்சியில் தற்போது கூட்டுறவு வங்கியில் ரூ. 1.5 கோடி திருடப்பட்டுள்ளது.
திருச்சி திருவெறும்பூரில் பெல் நிறுவன ஆளை வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ. 1.5 கோடி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சியை மையமிட்டு நடக்கும் தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரபல நகைக் கடை, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றிந் வரிசையில் அடுத்த அதிர்ச்சிக்குரிய சம்பவமாக கூட்டுறவு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.