வள்ளுவரை அவமதித்த கமல் கட்சி!- நடவடிக்கை எடுக்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

valluvar kamal - 2026

திருவள்ளுவர் “காவி மயம்” என்றால் எதிர்ப்பு , “கமல் மையம்” என்றால் கள்ள மவுனம்!! என்னடா உங்க நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.

இது குறித்து அவர் கூறியபோது…

உலகப் பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவனை பெருமைப் படுத்தாமல் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவிற்கு சென்னை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளைக் கண்டு திடுக்கிட்டுப் போயுள்ளோம்.

அதில் இடம் பெற்றுள்ள வாசகம் “அகர முதல எழுத்தெல்லாம் உலகநாயகன் முதற்றே உலகு” நம்மவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். – என்று தெய்வ வள்ளுவன் உருவத்தில் கமல் முகத்தைப் பதிய வைத்து ஜே அப்துல் ஜாபர் ,ராஜ்குமார் ஆகியோர் அச்சடித்து இருக்கிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஏற்கனவே பாரதியார் உருவ படத்தில் தன் முகத்தைப் பதித்து படம் வெளியிட்டிருந்தார்.

தற்போது வள்ளுவர் குறித்தான சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் நடிகர் கமல்ஹாசன் திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவரை அவமானப் படுத்துவதாகவேதோன்றுகிறது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

திருவள்ளுவரை அவமானப்படுத்தி விட்டார்கள் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்றெல்லாம் குலைநடுங்க கத்தியவர்கள்; திருவள்ளுவரை “கமல்ஹாசன் சாயம்” பூசுவதை ஏன் எதிர்க்கவில்லை.?

திருவள்ளுவர் உருவத்தில் கமல்ஹாசன் படம் வெளியிடுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது.வள்ளுவன் வாசுகி என்றுதான் உதாரணம் சொல்லுவார்கள் கமல்ஹாசனும்,…….
….நடிகைகள் போல என்று யாரும் உதாரணம் சொல்ல மாட்டார்கள்.

கடவுள் வாழ்த்தின் முதல் குரலை ,கமல் வாழ்த்தாக மாற்றி அச்சிடுவது திருக்குறளை அவமதிக்கும் செயலாகும்.

இப்படி படம் அச்சிடுவது கருத்து சுதந்திரம் என்று சொல்லக் கூடிய கமல் ரசிகர்கள், மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் பிற மதத்தின் உடைய பெரியவர்களை, கடவுள்களை போல கமல் படத்தை வைத்து அச்சிட முடியுமா?

அப்படிஅச்சடித்தால் ,ஒட்டினால், அந்த மதத்தவர்கள் சும்மா இருந்துவிடுவார்களா? என்பதை தமிழ் சமுதாயம் யோசனை செய்ய வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன் ….. இப்படி வள்ளுவருக்கு காவி வண்ணம் பூச கூடாது என்று இந்துமத வெறுப்பு எண்ணத்தோடு பேசியவர்கள், இந்த கமல் குறித்தான சுவரொட்டிக்கு என்ன கருத்து சொல்லப்
போகிறார்கள்?

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்…. என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories