ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு ஜெர்மனியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதற்காக ஆய்வுப்படைகள்,
உளவுத்துறைகள் மற்றும் அவசர சேவைகள் போன்றவை உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜெர்மனியில் ஒரு நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாத குழு ஜெர்மனி மீது இரசாயன ஆயுத தாக்குதலுக்கு தாயாரக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தண்ணீர் மாசுபடுத்துதல்,
நாட்டில் அதிக அளவு தண்ணீர் செல்லும் டேங்குகுகளில் இரசாயனங்களை கலக்குதல் மற்றும் கட்டிடங்களுக்கு செல்லும் தண்ணீர் தொட்டிகள் என பலவற்றை குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஏற்றாற் போல் ஜெர்மனில் உள்ள படை வீரர்கள் கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதே போன்று கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து அமைச்சர் ஜென்பா வலஸ் ஐஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்தை தாக்குதவதற்கு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



