*குடியரசு தினத்தன்று முதல்வர் கொடியேற்றக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு*
குடியரசு தினத்தன்று முதல்வர் கொடியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். ஆளுநர் இல்லாத பட்சத்தில் தலைமை நீதிபதி கொடியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.



