கோடையில் குடிநீர் வினியோகம் செய்வது குறித்து அமைச்சர் ஆய்வு

*குடிநீர் வினியோகம் குறித்து அமைச்சர் ஆய்வு: கோடையில் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கை*
சென்னை
பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் கூறியுள்ளது.
அமைச்சர் ஆய்வு
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் வினியோகம் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வினியோகம் குறித்தும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 12,522 மில்லியன் கன அடியில், 1,412 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே (11 சதவீதம்) இருப்பு உள்ளது. பருவமழை பொய்த்ததன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவே இருந்தபோதிலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி குடிநீர்
சென்னை மாநகரின் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.61 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரவனாறு ஆற்றிலிருந்து நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் நீர் எடுப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ள 10 ஆழ்துளை கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு வீராணம் குடிநீர் குழாய் மூலம் சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது. மீதமுள்ள 35 ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றதும் கூடுதலாக 20 மில்லியன் கனஅடி நீர் சென்னைக்கு எடுத்துவரப்படும்.
பரவனாறு ஆற்றுப்படுகையில் கூடுதலாக விசைப்பம்புகள் அமைக்கவும், மற்றும் நெய்வேலியில் 35 ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கவும் ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய கிணறுகள்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 300 விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது 118 விவசாய கிணறுகளிலிருந்து நாளொன்றுக்கு 40 மில்லியன் லிட்டர் அளவிற்கு நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தமாத இறுதிக்குள், 300 விவசாய கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் கனஅடி நீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படும். சென்னை மாநகரில் ஏற்கனவே 520 லாரிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 லாரிகளை வாடகைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 4,200 லாரி நடைகளின் எண்ணிக்கை 6,500 நடைகளாக அதிகரிக்கப்படும்.
ஆழ்துளை கிணறுகள்
சென்னை மாநகரில் கூடுதலாக 500 புதிய பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகருடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிதாக தேவைப்படும் ஆழ்துளை கிணறுகள் நிறுவுவதற்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பில் மொத்தம் 409 மில்லியன் கன அடி நீரை உபயோகிக்க ஏதுவாக பம்புசெட்டுகள் மூலம் இறைத்து சென்னை மாநகருக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளிலும் நீர்வற்றிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டால், காஞ்சீபுரம் மாவட்டம், மாமண்டூர், பாலூர் மற்றும் கருங்குழி ஆகிய தொலைதூரப் பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 500 நடை லாரிகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் நீர் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததன் காரணமாக கோடைகாலத்தில் ஏற்படவுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் பயன்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories