சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கொம்பன் பட பிரச்னை தொடர்பாக சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டார். அவைத்தலைவர் அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொம்பன் படக் காட்சிகள் தென் மாவட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தணிக்கை குழுவில் மனு கொடுக்கச் சென்றனர். அதை அவர்கள் ஏற்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி தரவில்லை. எனவே வெளிநடப்பு செய்தேன்… என்றார்.
கொம்பன் பிரச்னைக்காக புதிய தமிழகம் அவையில் இருந்து வெளிநடப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari