வாக்காளர்களுக்கு மது கூப்பன் அதிர வைக்கும் பஞ்சாப் தேர்தல்

சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு, வார இறுதி நாட்களில், மதுபானங்கள் சப்ளை செய்ய ஏதுவாக, முன்கூட்டியே, கூப்பன்கள் வினியோகிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
*போதை பழக்கம் அதிகரிப்பு*
பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமை யில், அகாலி தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்கு, பிப்., 4ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில், மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து இருப்பது, முக்கிய தேர்தல் பிரச்னையாக எதிரொலிக்கிறது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆளும் கூட்டணி தவறி விட்டதாகக் கூறி, காங்., – ஆம் ஆத்மி கட்சி கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
*வாக்காளர்களுக்கு கூப்பன்*
இந்நிலையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள், மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுஉள்ளனர்; இதில், கட்டுக்கட்டாக பணமும், ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களும் பிடிபட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில், மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களை பெற வசதியாக, வாக்காளர்களுக்கு கூப்பன்களும் வினியோகிக்கப்பட்டு உள்ளன; அதில், ரம், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களின் பெயர்கள், தனித்தனியாக அச்சிடப்பட்டு, கூப்பன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இது போன்ற ஏராளமான கூப்பன்களை, அதிகாரிகள், நேற்று முன்தினம் கைப்பற்றி உள்ளனர்.
*பரஸ்பரம் புகார்*
'அகாலி தள கட்சி பிரமுகர்கள், மதுபான ஆலைகளை நடத்தி வருகின்றனர். அவர்களே, கூப்பன்கள் வழங்கி வருகின்றனர்' என, காங்., குற்றஞ்சாட்டி உள்ளது. அதே சமயம், 'காங்., தலைவர் அமரீந்தர் சிங்கிற்கு சொந்தமான மதுபான ஆலைகளில் இருந்தே, வாக்காளர்களுக்கு, மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகின்றன' என, அகாலி தள கட்சி புகார் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories