பதற்றத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் – பரபர ‘ஆர்டர்’ ரெடி!

Published:


பணி காலம் முடிந்தும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பதவிகளில் அமர்த்தி இருந்தது. அதைப் போன்று பதவியில் அம்ர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தமிழக அரசில் வெவ்வேறு பதவிகளில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்கள் அனைவரையும் ஒரே உத்தரவின் மூலம் பதவி இழக்கச் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.

இந்த விஷயம் தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் முதல்வரின் செயலாளர் வெங்கடரமணா, மக்கள் தொடர்புத் துறையின் செயலாளராக இருந்த எழில் போன்றவர்களும் இந்த திடீர் அறிவிப்புப் பற்றி முன்னரே தெரியவேதான், அவர்களாகவே தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

சசிகலா வரும் 9-ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த அதிரடி தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img