சென்னை: தமிழகத்தில் உள்கட்டமைப்புத் துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என சீன தூதரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசென் தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது மே மாதம் சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சீன தொழிலதிபர்கள் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்தார். இதேபோல் சீனா வருமாறு முதல்வருக்கு சீன தூதர் அழைப்பு விடுத்தார். மேலும், சென்னையில் சீன நாட்டின் துணை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் என அந்நாட்டு தூதர் தெரிவித்ததாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புக்கு முதலீடு செய்ய சீன தூதரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

