புத்தாண்டு நள்ளிரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்! வந்தது கட்டுப்பாடு!

04 Nov 08 Dhin Crackers waste - 2026

ஆங்கிலப் புத்தாண்டு துவங்கும் நாளில் நள்ளிரவு ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க தீபாவளி நாளில் இரண்டு மணி நேரமும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு துவங்கும் நள்ளிரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனால், ஆங்கில புத்தாண்டு துவங்கும் நாளில், நள்ளிரவு, ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும்’ என, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது, உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த, அந்தந்த மாநில அரசுகள் கடுமையான கண்காணிப்புடன் செயல்படுகின்றன. தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன.

அது போல், வரும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நள்ளிரவு, 11:30 மணி முதல் 12:30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிப்போர் எண்ணிக்கை குறைவு. பனிக்காலம் என்பதால், பட்டாசு வெடிக்கும்போது, காற்று மாசு ஏற்படும். எனவே, அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; அனுமதிக்கப்படாத நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம்… என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தடை மீறி பட்டாசு வெடித்தால், புகார்கள் பதிவு செய்யப் படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories